முகப்பு /புதுச்சேரி /

புதுவையின் வரலாற்று சின்னம்.. தேவதாசியின் நினைவை போற்றும் ‘ஆயி மண்டபம்’ சிறப்புகள் தெரியுமா?

புதுவையின் வரலாற்று சின்னம்.. தேவதாசியின் நினைவை போற்றும் ‘ஆயி மண்டபம்’ சிறப்புகள் தெரியுமா?

X
ஆயி

ஆயி மண்டபம்

Puducherry symbol | புதுவை மாநில சட்டப்பேரவைக்கு எதிரேயுள்ள பாரதி பூங்காவில் ஆயி மண்டபம் அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுவை மாநில சட்டப்பேரவைக்கு எதிரேயுள்ள பாரதி பூங்காவில் அமைந்துள்ளது.

கிரேக்க - ரோமானிய கட்டிடக்கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயி என்ற தேவதாசி, குளம் வெட்டி குடிநீர்ப் பஞ்சம் தீர்த்த மக்கள் தொண்டின் நினைவைப் போற்றும் வகையில் எழுப்பப்பட்டுள்ளது.

கிருஷ்ணதேவராயர் தமது ஆளுகைக்குட்பட்டிருந்த புதுவையைப் பார்க்க வரும்போது முத்தரையர்பாளையத்தில் இருந்த ஒரு கோயில் போன்ற மாளிகையைக் கண்டு வணங்குகிறார். அதுதான் தேவதாசி ஆயியின் இல்லம். தேவதாசியின் இல்லத்தைக் கண்டு மன்னர் கும்பிடுவதைக் கண்ட சிலர் நகைத்துள்ளனர்.

உண்மையை அறிந்த கிருஷ்ணதேவராயர் கோபம்கொண்டு மாளிகையை இடிக்க உத்தரவிட்டதாகவும், ஆயி அரசரிடம் இறைஞ்சி அவகாசம் பெற்று அம்மாளிகை இருந்த இடத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் குளம் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.  இதுவே முத்தரையர்பாளையம் ஆயி குளம் என்பதாகும்.

புதுச்சேரி, பிரெஞ்சுகுடியிருப்பான பின்பு, புதுவையில் ஏற்பட்ட தண்ணீர்த் தட்டுப்பாட்டை நீக்க ஆளுநர் போன்டெம்ப்ஸ் வேண்டுகோளின் பேரில், பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் அனுப்பிவைத்த பொறியாளர் லாமைரெஸ்சே ஆயி குளத்திலிருந்து இன்று பாரதி பூங்கா உள்ள இடம்வரை கால்வாய் வெட்டினார். இது புதுச்சேரியின் குடிநீர்த் தட்டுப்பாட்டுப் பிரச்சினையைத் தீர்த்தது. இவ்வாறு தனது மாளிகையை இடித்து குளம்வெட்டி மக்கள் தொண்டாற்றிய தேவதாசியின் கதையை அறிந்த மூன்றாம் நெப்போலியன் ஆயியைச் சிறப்பிக்கும் வகையில், இம்மண்டபத்தை 1852 - 1870ஆம் ஆண்டு ஏற்படுத்தப்படுத்தினார்.

First published:

Tags: Puducherry