புதுச்சேரி காந்தி மக்கள் இயக்கம் சார்பில் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் போராட்டம் நடந்தது.
அதன்படி, அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் காந்தி மக்கள் இயக்க நிறுவனர் வேனு. ஞானமூர்த்தி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட காந்தி மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தொண்டர் ஒருவர் தலையில் அணிந்திருக்கும் தொப்பி மற்றும் அணிந்திருக்கும் சட்டையின் மற்றும் பின்புறங்களில் மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாற்றுத்திறனாளியயான இவர், ஊன்றுகோல் துணையுடன் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தார். இவரின் போராட்டத்தை சாலையில் சென்ற அனைவரின் கவனங்களையும் ஈர்த்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry