முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் வைக்கப்பட்டுள்ள ஜி-20 பதாகையில் தமிழ் மொழி புறக்கணிப்பு..

புதுவையில் வைக்கப்பட்டுள்ள ஜி-20 பதாகையில் தமிழ் மொழி புறக்கணிப்பு..

X
ஜி-20

ஜி-20 பதாகையில் தமிழ் மொழி புறக்கணிப்பு

G20 Banner Avoid Tamil Language | புதுச்சேரியில் ஜி20 மாநாட்டிற்காக வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்துவிட்டு இந்தி மற்றும் ஆங்கிலம் இடம்பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ஜி-20 நாடுகளின் ஓராண்டுக்கால தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனிடையே ஆரம்பகட்ட மாநாடு வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதற்காக புதுச்சேரி முழுவதும் விளம்பர பதாகைகளை அரசு வைத்துள்ளது. அந்த விளம்பர பதாகைகளில் ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ளதற்கு தமிழறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த அருங்காட்சியகத்திலும், பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த வீட்டிலும் புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத்துறை ஜி-20 மாநாடு குறித்த விளம்பர பதாகை வைத்துள்ளனர்.

இந்நிலையில், அதில் ஆங்கிலமும், இந்தி மொழி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இருபெறும் தமிழறிஞர்கள் வாழ்ந்த வீடு அருங்காட்சியமாக உள்ள நிலையில், இங்கு வரும் தமிழர்களுக்கு புரியாத ஹிந்தி மொழியில் பதாகை வைத்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆகவே இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பாரதிதாசன் நினைவு அருங்காட்சியக வாசலில் வைக்கப்பட்டுள்ள இந்தி, ஆங்கில விளம்பரம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டிலும் உள்ள தமிழ் அல்லாத பதாகைகளை அகற்ற வேண்டும், அவ்வாறு புதுவை அரசு உடனே செய்யாவிடில் தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டம் என தமிழறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Puducherry