புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சி மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகளம் காத்த கருமாரியம்மன் கோயிலில் பௌர்ணமி விழாவினை முன்னிட்டு தீச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry