புதுச்சேரியில் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது விதிகளை மீறியதாக கூறி பல்வேறு அரசு துறைகளில் உள்ள ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தனர். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 16வது நாளில் பல்வேறு துறையின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் பல்வேறு அரசு துறைகளில் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனை அடுத்து இந்த அறிவிப்பை வரவேற்கும் வகையில் பல்வேறு துறைகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சட்டப்பேரவை முன்பு கூடி முதலமைச்சர் ரங்கசாமி பயணித்த வாகனத்தின் மீது மலர் மழை போல மலர்களை தூவி தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry