கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நாடகம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி சித்ரா தலைமை தாங்கினார்.
வாசக்டமி எனப்படும் சிகிச்சை முறை ஆண்களுக்கு செய்யப்படுவதாகும். இது உடலில் கத்தி படாமல் ரத்தம் சிந்தாமல் செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையாகும். இதை ஆண்கள் செய்யும் பட்சத்தில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் தங்களின் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு நடித்துக் காட்டி சிவகுரு ஞானம் நாடக கலை குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியின் முடிவில் கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராமப்புற செவிலியர் தனலட்சுமி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர் ஜெகநாதன், ஆஷா ஊழியர்கள் ரேணுகா, விருதாம்பாள் செய்திருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry