முகப்பு /புதுச்சேரி /

புதுவை ஆரோவில் நகரை சுற்றிப்பார்க்க 2 நாள் தடை..

புதுவை ஆரோவில் நகரை சுற்றிப்பார்க்க 2 நாள் தடை..

ஆரோவில்

ஆரோவில்

Puducherry News : புதுவை ஆரோவிலை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவையில் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் ஜி-20 மாநாடு மரப்பாலம் அருகே உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்த ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 31ம் தேதி மாநாட்டில் பங்கேற்று விட்டு மதியம் ஆரோவில் சர்வதேச நகரத்தை சுற்றி பார்க்க சிறப்பு விருந்தினர்கள் வரும் நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக இன்று மண்டல துணை தாசில்தார் அருள்மொழி தலைமையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் கோரிமேடு பிள்ளையிலிருந்து ஆரோவில் வரை சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். மேலும் 30ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆரோவில் எல்லைக்குள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே வர போலீசார் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் ஆரோவில் மாத்திர் மந்திரில் பொதுமக்களுக்கு தியானமும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Puduchery