முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி அரசு அலுவலகத்தில் புகுந்த 7 அடி நீள பாம்பு... லாவகமாக பிடித்த வனத்துறையினர்..!

புதுச்சேரி அரசு அலுவலகத்தில் புகுந்த 7 அடி நீள பாம்பு... லாவகமாக பிடித்த வனத்துறையினர்..!

X
மின்துறை

மின்துறை அலுவலகத்தில் மறைந்திருந்த பாம்பு

Pondicherry News | அறையை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த வாதானுர் பகுதியில் மின்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள ஒரு அறையை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறை ஊழியர்கள் சண்முகம் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இணைந்து அங்கு இரும்பு மின் கம்பங்களுக்கு இடையே இருந்த 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை அரை மணி நேரம் போராடி லாவகமாக பிடித்து வனத்துறைக்கு எடுத்து சென்றனர்.

First published:

Tags: Local News, Puducherry, Snake