புதுச்சேரி அண்ணாசாலை - செட்டிவீதி சந்திப்பில் கேட்பாரற்று, பை ஒன்று சாலையோரம் கிடந்தது. அங்குள்ள டீ கடையின் மாஸ்டர் பெரியசாமி மற்றும் உரிமையாளர் பாலமுருகன், அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் உடன் அழைத்து வந்து, அந்த பையைத் திறந்து பார்த்தபோது, அதில், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் அதிகளவில் இருந்தன. இவ்வளவு பணம் இருப்பதை கண்டு பதறிய இவர்கள் உடனடியாக பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தவறவிட்ட பணம் வெங்கட்டா நகரைச் சேர்ந்த சங்கர் உடையது என விசாரணையில் தெரியவந்தது. இவர் பணத்தை வங்கியில் செலுத்த எடுத்துச் சென்றபோது தவறி விழுந்தது என விசாரணையில் தெரிந்தது.
இதையும் படிங்க : நாகர்கோவில் - நெல்லை, கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவிப்பு..
இந்நிலையில் நேர்மையாக பணத்தை ஒப்படைத்த டீ கடையின் மாஸ்டர் பெரியசாமி மற்றும் உரிமையாளர் பாலமுருகன், ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் தலைமையில் பெரியக்கடை காவல்துறை அதிகாரிகள் சால்வை அணிவித்தும், பாராட்டு சான்றிதழ் கொடுத்ததும் கவுரவப்படுத்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry