புதுச்சேரியில் பாரம்பரிய இசைக்கருவியான உடுக்கையை பயன்படுத்தி அதனை இசைத்துகொண்டே நாட்டியம் ஆடும் கலையை உலக அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் சங்கமம் குளோபல் அகாடமி சார்பில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடைபெற்றது.
இந்த சாதனை நிகழ்ச்சியில் மலேசியா, இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தும் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு உடுக்கை வாத்தியம் இசைத்துக்கொண்டே தொடந்து 8 நிமிடம் நடனமாடி புதிய உலக சாதனை படைத்தனர்.
இந்த புதிய சாதனை நிகழ்ச்சி யுனிக் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது மேலும் புதிய சாதனை படைத்ததற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்தா, நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry