முகப்பு » புகைப்பட செய்தி » விருதுநகர் » இந்த ஒரு கோவிலில் இப்படி வழிபட்டால் உலகின் அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம் - திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவிலின் சிறப்புகள்!

இந்த ஒரு கோவிலில் இப்படி வழிபட்டால் உலகின் அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம் - திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவிலின் சிறப்புகள்!

Thirumeninathar Temple | விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள திருமேனிநாதர் கோவில் பல்வேறு சிறப்புகளைக் கெண்ட சிலதலமாகும். எங்கு செய்த பாவமாக இருந்தாலும் இந்த ஆலயத்தில் வழிபட்டால் நீங்கும் என்கிறனர் பக்தர்கள்.

  • 18

    இந்த ஒரு கோவிலில் இப்படி வழிபட்டால் உலகின் அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம் - திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவிலின் சிறப்புகள்!

    மாவட்டம் திருச்சுழியில் உள்ள திருமேனிநாதர் கோவில், விருதுநகரில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும், அருப்புக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவத்தலமாகும். புகழ்பெற்ற இந்த கோவில் தேவாரப் பாடல் பெற்ற 274 ஆலயங்களில் 202ஆவது ஆலயமாகவும், பாண்டிய நாட்டுத் தலங்களில் 12ஆவது தலமாகவும் திகழ்கிறது.

    MORE
    GALLERIES

  • 28

    இந்த ஒரு கோவிலில் இப்படி வழிபட்டால் உலகின் அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம் - திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவிலின் சிறப்புகள்!

    இந்த கோவிலின் மூலவர் திருமேனிநாதர். இவர் சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோல நாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர் மற்றும் பூமீஸ்வரர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அம்பாள் துணைமாலையம்மை சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள் மற்றும் மாணிக்கமாலை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

    MORE
    GALLERIES

  • 38

    இந்த ஒரு கோவிலில் இப்படி வழிபட்டால் உலகின் அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம் - திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவிலின் சிறப்புகள்!

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் காணப்படுகிறது. துணைமாலையம்மை மதுரை மீனாட்சி அம்மனைப் போலவே காட்சி தருகிறார். நடன அமைப்பில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

    MORE
    GALLERIES

  • 48

    இந்த ஒரு கோவிலில் இப்படி வழிபட்டால் உலகின் அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம் - திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவிலின் சிறப்புகள்!

    இது ரமண மகரிஷி அவதரித்த தலம் என்பது கூடுதல் சிறப்பு. 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு இந்த திருசுழியில்தான் மகனாகப் பிறந்தார்.அவர் தென்னிந்திய யாத்திரை மேற்கொண்டபோது, இந்த தலத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 58

    இந்த ஒரு கோவிலில் இப்படி வழிபட்டால் உலகின் அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம் - திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவிலின் சிறப்புகள்!

    திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவில் இறைவனை சிவராத்திரி நாளில் ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால், உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டு, அர்ச்சனை செய்த பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 68

    இந்த ஒரு கோவிலில் இப்படி வழிபட்டால் உலகின் அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம் - திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவிலின் சிறப்புகள்!

    சிவபெருமான் திருமணக் கோலத்தில் அருளும் இந்த கோவிலில் திருமணம் செய்து கொள்வதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இதேபோல எல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் நீங்கும் என்கிறனர். ஆனால் இந்த ஊரில் செய்த பாவம், இங்கே அன்றி வேறு எங்கும் தீராது என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 78

    இந்த ஒரு கோவிலில் இப்படி வழிபட்டால் உலகின் அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம் - திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவிலின் சிறப்புகள்!

    இங்கே பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது, ஒரு அம்பினால் சுழித்து அந்த வெள்ளத்தை பாதாளத்திற்குள் செலுத்தியதால், இந்த ஊர் ‘திருச்சுழியல்’ என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இறந்தவர்களுக்கு அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றும் வழக்கம் இந்த ஆலயத்தில் இருக்கும் சிறப்பாகும்.

    MORE
    GALLERIES

  • 88

    இந்த ஒரு கோவிலில் இப்படி வழிபட்டால் உலகின் அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம் - திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவிலின் சிறப்புகள்!

    இந்த கோவிலில் நவராத்திரி, ஆவணி மூலம், சித்திரை விஷூ, கார்த்திகை சோமவாரம், ஆடித் தபசு, தைப்பூசம், பங்குனி பிரம்மோற்சவம், தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்ன்றனர்.

    MORE
    GALLERIES