முகப்பு » புகைப்பட செய்தி » விருதுநகர் » சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

Grizzled Squirrel Sanctuary | விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கிறது சாம்பல் நிற அணில்கள் சரணாலயம். இங்கே உயர்ந்த மரத்தில் வாழும் பெரியவகை அணில்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

  • 18

    சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

    மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி பசுமையும் அழகும் நிறைந்த காட்டில் 480 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்.

    MORE
    GALLERIES

  • 28

    சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

    அணில்களில் சற்று பெரிய அளவு கொண்டவை இந்த சாம்பல் நிற அணில்கள். இந்த அணில்களை அழியாமல் பாதுகாக்கும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 38

    சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

    முதுகுப்பகுதி சாம்பல் நிறத்திலும், இளஞ்சிவப்பு நிற மூக்குடனும், அடர்த்தியான முடியும் மிக நீண்ட வாலுடனும் காணப்படும் இந்த அணிலைப் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். பெரும்பாலும் இந்த அணில்கள் மரத்தின் உச்சியிலேதான் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 48

    சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

    மலை அணில் வகையைச் சேர்ந்த இந்த சாம்பல் நிற அணிலை பாதுகாக்க 1989 ஆம் ஆண்டு இந்த சரணாலயம் தொடங்கப்ப்பட்டது. இது பின்னர், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் மேகமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 58

    சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

    இந்த இடம் மேற்கில் கேரள மாநிலம் பெரியாறு புலிகள் காப்பகமும், வடமேற்கில் மேகமலை காப்புக்காடும், கிழக்கில் சிவகிரி காப்புக்காடும் சூழ்ந்து பரந்து விரிந்த பகுதியாக காணப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 68

    சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

    இந்நிலையில், இந்த அணில்கள் சரணாலயமானது ஆக்கிரமிப்பு, கால்நடைகளை மேய்த்தல், காட்டுத்தீ, வேட்டையாடுதல் ஆகியவற்றை தடுக்கவும், இந்த சாம்பல் நிற அணில்களில் எண்ணிக்கை அதிகரிக்கவும் முக்கிய பங்காற்றுகிறது.

    MORE
    GALLERIES

  • 78

    சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

    இந்த பகுதியில், புலிகளின் நடமாட்டம் இருப்பதால், புலிகள் சரணாலயமாக அறிவிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கே யானை, தேவாங்கு, முள்ளம்பன்றி, வேங்கைப் புலி, சிறுத்தை, வரையாடு, கடமான், கேளையாடு, கருமந்தி, வெள்ளை மந்தி உள்ளிட்ட விலங்குகளும் காணப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 88

    சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

    இங்கே சுமார் 220 வகையான பறவையினங்கள் இருப்பது தெரிவயந்துள்ளது. அவற்றுள் 15க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் ஓரிடவாழ்விகளாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இங்கு வாழும் சாம்பல்நிற நரை அணிலே இவ்விடத்தின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

    MORE
    GALLERIES