முகப்பு » புகைப்பட செய்தி » விருதுநகர் » விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாறு பகுயியில் தோண்டத் தோண்ட நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன.

  • 19

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

    மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின்போது இங்கே நுண் கற்காலம் முதல் இடைக்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டு வெளிப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 29

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

    அதனைத் தொடர்ந்து, வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டு பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் தொல்லியல் துறையினர் கடந்த ஆண்டு (2022) மார்ச் 16ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டனர். அங்கே அகழாய்வுக்காகத் தோண்டப்பட்ட 16 குழிகளில் பல்வேறு அரிய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 39

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

    அதன்படி, சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள், முத்துமணிகள், காளை உருவம், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், சுடுமண்ணாலான மனிதனின் தலை உருவம், பறவையின் தலை உருவம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 49

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

    இதேபோல, பழங்கால பாசி மணிகள், காதணிகள், சிறு பானை, சுடு மண்ணாலான தொங்கட்டான், வளையம், தந்தத்தாலான தொங்கட்டான், செவ்வந்திக்கல், கோடரி, கை கோடரி, சூது பவளமணி, அரவைக்கல், தங்க அணிகலன், சுடுமண்ணாலான முத்திரை, ஆண் உருவம் உட்பட 3,254 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 59

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

    இந்த முதல் கட்ட அகழாய்வின் முடிவில் சங்கு வளையல்கள் இங்கு தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும், இங்கு தயாரான சங்கு வளையல்களை கடல் வழியாக வெளிநாடுகளுக்கு வணிகம் செய்ததற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 69

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

    இந்த முதல்கட்ட அகழாய்பு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தேதி நிறைவடைந்தது. இந்த ஆய்வில் மொத்தம் 16 குழிகள் தோண்டப்பட்டன. இதில் மொத்தம் 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 79

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

    இங்குக் கண்டறியப்பட்ட செப்பு நாணயங்கள் ஆப்கன் நாட்டுடனான வர்த்தக உறவை எடுத்துக்காட்டுவதாகவும் அற்கான அடையாளமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், பல்வேறு முத்திரைகள் இருப்பதால், அங்கு வெவ்வேறு குழுக்கள் வந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 89

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

    இங்கே 16 இடங்களில் தீ மூலம் எதோ செய்துள்ளதற்கான சான்றும் கிடைத்தன. இந்நிலையில், வெம்பக்கோட்டை அருகே 2ஆம் கட்ட அகழாய்வு பணி இம்மாத (பிப்ரவரி) இறுதியில் தொடங்கப்படும் என தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 99

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை நேரில் பார்திருக்கீங்களா?

    இந்த இடத்தை நேரில் சென்று நம் முன்னோர்களின் வாழ்விடத்தை பார்ப்பது “புது சக்தி பிறக்குது மூச்சினிலே” என்று பாரதியார் கூறியதுபோல அலாதியான பெருமிதம் ததும்பும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

    MORE
    GALLERIES