முகப்பு » புகைப்பட செய்தி » விழுப்புரம் » விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் மர பூங்காவை பார்த்திருக்கீங்களா? - இங்கே வியப்பூட்டும் அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் மர பூங்காவை பார்த்திருக்கீங்களா? - இங்கே வியப்பூட்டும் அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன!

Villupuram District | விழுப்புரம் மாவட்டம்  திருவக்கரையில் அமைந்திருக்கிறது தேசிய கல் மர பூங்கா. இங்கே 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழந்த மரங்கள் தற்போது கல் மரங்களாய் காட்சியளிக்கின்றன.

  • 18

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் மர பூங்காவை பார்த்திருக்கீங்களா? - இங்கே வியப்பூட்டும் அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன!

    மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ள திருவக்கரையில் அமைந்திருக்கிறது தேசிய கல் மர பார்க். இங்கே சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழந்த ஏராளமான மரங்கள் தற்போது கல்லாய் மாறி கிடக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 28

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் மர பூங்காவை பார்த்திருக்கீங்களா? - இங்கே வியப்பூட்டும் அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன!

    திருவக்கரையில் மணல் பாறைகளுக்கு இடையே கல்லாய் மாறிய ஏராளமான மரங்கள் காணப்படுகின்றன. இதனை பார்ப்பதற்கு உள்நாடு மட்டும் அன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 38

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் மர பூங்காவை பார்த்திருக்கீங்களா? - இங்கே வியப்பூட்டும் அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன!

    திருவக்கரையில் சிறப்புமிக்க அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த ஊரில் ஆச்சரிய மூட்டுமூம் 200க்கும் மேற்பட்ட கல்லாய் மாறிய பிரம்மாண்ட மரங்களை பார்க்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 48

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் மர பூங்காவை பார்த்திருக்கீங்களா? - இங்கே வியப்பூட்டும் அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன!

    இந்த மரங்கள் சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவை என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போது இவை புதைபடிவ கல்லாய் மாறியுள்ளன. இங்கு இந்த தொல்லுயிர் படிம மரங்களின் பெயரும் அறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பது தனிச்சிறப்பு.

    MORE
    GALLERIES

  • 58

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் மர பூங்காவை பார்த்திருக்கீங்களா? - இங்கே வியப்பூட்டும் அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன!

    ஆற்றில் அடித்துவரப்பட்ட மரங்கள் மணலோடும், கூழாங்கற்களோடும் சேர்ந்து நீர்நிலைகளில் படிந்து, காலப்போக்கில் மென்மேலும் மணற்படிவங்கள் அடுக்கடுக்காகப் படிந்ததால் ஏற்பட்ட வெப்ப அழுத்த மாற்றங்களால், இவை மரத்தின் தன்மையை இழந்து, சிலிக்காவை எடுத்துக்கொண்டு கல்மரங்களாக மாறியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன.

    MORE
    GALLERIES

  • 68

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் மர பூங்காவை பார்த்திருக்கீங்களா? - இங்கே வியப்பூட்டும் அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன!

    இங்கே சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் காணப்படும்  இந்த கல்மரங்களுள் சில 30 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் குறுக்களவும் கொண்டவையாக இருக்கின்றன. உலகின் சில பகுதிகளில் மட்டுமே இதுபோன்ற அரியவகை கல்மரங்கள் கிடைத்துள்ளனர். இந்த கல்மரங்களை பார்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், ஆய்வாளர்களும் இங்கே வந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 78

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் மர பூங்காவை பார்த்திருக்கீங்களா? - இங்கே வியப்பூட்டும் அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன!

    இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டிற்கு இந்த பூங்காவிலிருந்து இரண்டு மரபுதைப்படிவங்களை நன்கொடையாக வாங்கிச் சென்றுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 88

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் மர பூங்காவை பார்த்திருக்கீங்களா? - இங்கே வியப்பூட்டும் அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன!

    1957 ஆம் ஆண்டு முதல் இந்திய புவியியல் ஆய்வுத்துறை இந்த கல்மரங்களை போற்றிப் பாதுகாத்து வருகிறது. இந்த பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் . இங்கே குழந்தைகளுடன் சென்று குடும்பத்தோடு பர்த்து வியக்கலாம். மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்வதற்கும் ஏற்ற இடமாகும்.

    MORE
    GALLERIES