முகப்பு » புகைப்பட செய்தி » விழுப்புரம் » மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

Villupuram Temple | விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரம்மதேசம் என்ற ஊரில் பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கே வழிபட்டால் காசிக்குச் சென்று காசிவிஸ்வநாதரை வழிபட்ட கிடைக்கும் பலனைப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

  • 111

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது பிரம்மதேசம் என்ற கிராமம். விழுப்புரம்-செஞ்சி சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடகிழக்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும், செஞ்சியில் இருந்து தென்கிழக்கு திசையிலும் அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 211

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    இங்கிருக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மற்றும் பாதலீசுவரர் கோவில் ஆகிய இரண்டும் தொல்லியல் துறையால் நினைவுச்சின்னங்களின் பட்டியலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றுள் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பல்வறு சிறப்புகளைக் கொண்ட கோவிலாகும்.

    MORE
    GALLERIES

  • 311

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    பிரம்மபுரீஸ்வரர் கோவில் என்று தற்போது அழைக்கப்படும் இந்த சிவன் கோவிலானது, ராஜராஜ ஈஸ்வரமுடையார் என்று சோழர்காலத்தில் அழைக்கப்பட்டது.பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர மன்னர்கள் எனப் பல்வேறு மன்னர்களால் போற்றப்பட்ட தலமாக இது இருந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 411

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    பிரம்மதேசம் என்பது ‘பிரம்மதேயம்’ என்ற பெயரில் இருந்து மருவி வந்துள்ளன. அந்தணர்களுக்குத் தானமாக கொடுக்கப்பட்ட ஊர் என்பதால் பிரம்மதேயம் என்று அழைக்கப்பட்ட இத்தலம், நாளடைவில் மருவி பிரம்மதேசம் என்று ஆனதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 511

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் சோழர் காலத்தைச் சார்ந்தது என்று கூறப்படுகிறது. எனினும் இங்கே கிடைத்த துர்க்கை சிலையானது, பல்லவர் காலத்திலும் இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்தால், பிரமாண்ட திருச்சுற்று மாளிகை அமைந்திருப்பதைப் பார்க்க முடியும். இதில் இரட்டைப் பிரகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உருண்டை வடிவ கல்தூண்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 611

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    நாற்புறமும் கல்மண்டபத்தைக் கொண்டுள்ள இந்த மண்டபம் அக்காலத்தில் கல்விச் சாலையாக செயல்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வலதுபுறத்தில் பெரிய மண்டபம் உள்ளது. இது பழைய அம்மன் சன்னிதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 711

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    கிழக்கு நோக்கிய கருவறையானது சதுரவடிவில் அமைந்துள்ளது. அதில் அழகே வடியாய் லிங்கத் திருமேனியாக பிரம்மபுரீஸ்வரர் காட்சிபுரிகிறார்.பல நூற்றாண்டுகளைக் கடந்து புதுப்பொலிவோடு இந்த லிங்கம் காட்சிதருகிறது.

    MORE
    GALLERIES

  • 811

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    முகமண்டபம் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. இந்த மண்டபத்தில் நான்கு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. பிரகாரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட விநாயகர் காட்சியளிக்கிறார். முருகர் வள்ளி-தெய்வயானையுடன் அருள்புரிகிறார். பைரவர் துர்க்கை, ஆகியோரின் சன்னிதிகளும் உள்ளன. வடதிசையில் சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 911

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    இந்த கோவிலில் காணப்படும் லிங்கத்தை வழிபடும் அடியார், பசு, காகம், நாகம், மீன் ஆகிய சிவபுராணச் சிற்பங்களும், பஞ்சதந்திரக் கதைகளை நினைவுபடுத்தும் சிற்பங்களும் தனிச் சிறப்புகளாக அமைந்திருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 1011

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    இந்த கோவில் பாவங்களை போக்கும் தலமாக போற்றப்படுகிறது. இந்த பிரம்மபுரீஸ்வரரை வழிபடுவதன் மூலம் காசிக்குச் சென்று காசிவிஸ்வநாதரை வழிபட்ட பலனைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. போட்டிக்குச் செல்பவர்கள் இங்கே ழிபட்டுச் சென்றால் வெற்றியோடு திரும்பலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1111

    மண்ணுக்குள் புதைந்துகிடந்த பிரம்மதேசம் சிவன் கோவில்... புதுப்பொலிவும், காசிக்கு நிகராக போற்றப்படும் சிறப்புகளும்!

    பல்வேறு சிறப்புகளையும், பழமையை போற்றும் கல்வெட்டுகளையும் கொண்ட இந்த கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் இந்த கோவிலில் வழிபட்டுவது வழக்கம். கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனில் இந்தப் பகுதி குறித்தும், இங்கு நிகழ்ந்த மன்னர்களின் வாழ்க்கையைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவில் தற்போது தொல்லியல் துறையால் புதுப்பொலிவுடன் மறு கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES