முகப்பு » புகைப்பட செய்தி » திருச்சி » ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

Trichy District | திருச்சி மாவட்டம் திருக்கரம்பனூரில் உள்ள உத்தமர் கோவில் என்று அழைக்கப்படும் பிச்சாண்டார் கோவில் ஏழு குருமார்களும் இணைந்து அருளும் தலமாக போற்றப்படுகிறது.

  • 110

    ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

    மாவட்டம் திருக்கரம்பனூரில் உள்ள உத்தமர் கோவில் நாவுக்கரசர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகியோர் பாடல்பெற்ற திருத்தலமாகவும், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த 108 திவ்ய ஸ்தலங்களுள் ஒரு வைணவத் தலமாகவும் திகழ்கிறது.

    MORE
    GALLERIES

  • 210

    ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

    இந்த கோவிலை சைவர்களுக்கு 'பிச்சாண்டார் கோவில்' என்றும், வைணவர்கள் இதனை 'உத்தமர் கோவில்' எனவும் போற்றி வழிபடுகின்றனர். அத்தகைய சிறப்புமிக்க தலமாக திகழ்கிறது இந்த கோவில்.

    MORE
    GALLERIES

  • 310

    ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

    இங்கே, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர், தமது மனைவியர்களான சரஸ்வதி, திருமகள், பார்வதி ஆகியோர்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இந்த சிறப்பு வேறெந்த கோவிலுக்கும் இலலை.

    MORE
    GALLERIES

  • 410

    ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

    பழைமை சிறப்பும் புகழும் கொண்ட இந்த கோவில், மும்மூர்த்திகளும் அருள் புரிவதால், இது மும்மூர்த்தி க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கடம்ப வனமாக இந்த பகுதி இருந்தாகவும், எனவே கடம்பனூர் என்று முற்காலத்தில் வழங்கப்பட்டது என்றும், இதுவே திரிந்து பிற்காலத்தில் கரம்பனூர் என்று அழைக்கடுவதாகவும் சொல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 510

    ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

    பிரம்மனின் ஆணவத்தை அழிக்க சிவபெருமான, பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தபோது, அது சிவபெருமானின் விரலோடு ஒட்டிக் கொண்டதாம், இதனால் பிட்சாடனக் கோலத்தில் இங்கு வந்த சிவபெருமான், திருமகளின் திருக்கரத்தால் பிட்சை வாங்கி தன் சாபம் தீர்த்துக் கொண்டாராம்.

    MORE
    GALLERIES

  • 610

    ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

    எனவே இந்த கோவில் பிச்சாண்டார் கோயில் என்று பெயர் பெற்றது என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் திருமால் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் அருள்புரிகிறார்.

    MORE
    GALLERIES

  • 710

    ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

    உற்சவர் நின்ற கோலத்தில் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். மேற்கு நோக்கி லிங்கத் திருமேனியராக சிவபெருமான் காட்சியளிக்கிறார். அன்னை பார்வதி இங்கே ஸ்ரீசௌந்தர்ய நாயகியாக காட்சியளிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 810

    ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

    தசரத மன்னன் வரம் வேண்டி இங்கு வந்து வழிபட்டதாகவும், சிவபெருமான் பிள்ளை வரம் தந்ததால் தசரதன் லிங்கத்தை அமைத்து வழிபட்டதாகவும், இதனாலேயே இங்கே, சரத லிங்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 910

    ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

    குருமார்களில் ஏழு பேரும் வழிபட்ட சிறப்பான தலமாகவும் ஆதி குருஸ்தலம் என்றும் இது போற்றப்படுகிறது. அதன்படி பிரம்ம குரு, விஷ்ணு குரு, சிவ குரு, சக்தி குரு, சுப்ரமணிய குரு, தேவ குரு என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி, அசுர குரு ஆகிய ஏழு குருமார்களும் ஒருசேர தரிசனம் தந்து, பக்தர்களுக்கு அருள்புரியும் சிறப்பான குரு பரிகார தலமாக இது போற்றப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 1010

    ஏழு குருமார்கள் இணைந்து அருளும் ஸ்தலம் - திருச்சி உத்தமர் கோவில்!

    சகல தெய்வங்களும் அருளும் சிறப்புமிக்க தலமாக இரு இருப்பதால் பக்தர்களின் வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறும் என்று போற்றப்படுகிறது. குரு பெயர்ச்சி நாளில் இங்கே வழிபடுதல் சிறந்த பலனைக் கொடுக்கும் என்று சொல்கின்றனர் பக்தர்கள்.

    MORE
    GALLERIES