முகப்பு » புகைப்பட செய்தி » மனநோய் குணமாக பக்தர்கள் தேடி செல்லும் குணசீலம் வெங்கடாஜலபதி கோவில்...

மனநோய் குணமாக பக்தர்கள் தேடி செல்லும் குணசீலம் வெங்கடாஜலபதி கோவில்...

Trichy Gunaseelam Venkatajalapathi Temple | திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி விஷ்ணு கோவில் சிறப்புகள் குறித்தும் நாம் காணலாம். இந்த கோவில் ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலாக இருக்கிறது. பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையான தலமாகவும் இருக்கிறது. 

  • 16

    மனநோய் குணமாக பக்தர்கள் தேடி செல்லும் குணசீலம் வெங்கடாஜலபதி கோவில்...

    மாவட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் சிறப்புகள் குறித்தும், இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கைகள் குறித்தும் காணலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    மனநோய் குணமாக பக்தர்கள் தேடி செல்லும் குணசீலம் வெங்கடாஜலபதி கோவில்...

    குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி விஷ்ணு கோவில் திருச்சிக்கு 20 கி.மீ (12 மைல்) தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    MORE
    GALLERIES

  • 36

    மனநோய் குணமாக பக்தர்கள் தேடி செல்லும் குணசீலம் வெங்கடாஜலபதி கோவில்...

    கோவிலின் கர்ப்பகிரகத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி நின்று அருள்பாலிக்கிறார். அவர் நான்கு கைகளுடன் காணப்படுகிறார். நரசிம்மர், நவநீத கிருஷ்ணர், வராகர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர்களின் சிலைகளம் இந்த சன்னதியில் அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    மனநோய் குணமாக பக்தர்கள் தேடி செல்லும் குணசீலம் வெங்கடாஜலபதி கோவில்...

    மூன்று கோபுரங்களை கொண்டிருக்கும் இந்த கோவிலின் விமானமானது, திரிநேத்ர விமானம் என அழைக்கப்படுகிறது. கழுதை வராகர் கருடா மீது நரசிம்மரை சங்கு மற்றும் சக்கரத்துடன் விஷ்ணுவின் உருவத்தில் சித்தரிக்கும் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 56

    மனநோய் குணமாக பக்தர்கள் தேடி செல்லும் குணசீலம் வெங்கடாஜலபதி கோவில்...

    இந்த கோவிலில் முக்கிய திருவிழாவாக, ஆண்டு பிரம்மோற்சவம் புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் - அக்டோபர்) பதினொரு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அப்போது நடைபெறும் தேர் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இதேபோல்,  தெப்போற்சவ திருவிழா சித்திரை மாதங்களில் கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் பல்வேறு விழாக்கள் இங்கே நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 66

    மனநோய் குணமாக பக்தர்கள் தேடி செல்லும் குணசீலம் வெங்கடாஜலபதி கோவில்...

    இந்நிலையில், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்று, 48 நாட்களுக்கு கோவில் வளாகத்திலேயே தங்கி வழிபட்டு வந்தால், 48 நாட்களின் முடிவில் பிரசன்ன வெங்கடாஜலபதி தெய்வத்தின் அருளால் குணமடைவார்கள் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

    MORE
    GALLERIES