முகப்பு » புகைப்பட செய்தி » சிவனை வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து முருகன் வழிபடும் தலம் - திருச்சியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலா? 

சிவனை வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து முருகன் வழிபடும் தலம் - திருச்சியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலா? 

Trichy | திருச்சியில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது வயலூர். இந்த ஊர் வயல்வெளிகள் சூழ்ந்திருப்பதால், வயலூர் என்று கூறப்பட்டது. இந்த ஊர் ‘உறையூர் கூற்றத்து வயலூர்’,  ‘தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்’, ‘ராஜகம்பீர வளநாடு’, ‘மேலைவயலூர்’ எனவும் அழைக்கப்படுகிறது.

  • 16

    சிவனை வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து முருகன் வழிபடும் தலம் - திருச்சியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலா? 

    யில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது வயலூர். இந்த ஊர் வயல்வெளிகள் சூழ்ந்திருப்பதால், வயலூர் என்று கூறப்பட்டது. இந்த ஊர் ‘உறையூர் கூற்றத்து வயலூர்’, ‘தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்’, ‘ராஜகம்பீர வளநாடு’, ‘மேலைவயலூர்’ எனவும் அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    சிவனை வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து முருகன் வழிபடும் தலம் - திருச்சியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலா? 

    அருணகிரிநாதருக்கு உத்தரவு :
    முருகப் பெருமான் திருவண்ணாமலையில் அருணகிரிநாதரை கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்டபோது, முதன் முதலில் வயலூர் வர உத்தவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, அங்கு சென்ற அருணகிரிநாதர் முருகப் பெருமானை வழிபட்டு 18 பாடல்களை பாடினார். அங்குதான் ‘திருப்புகழ்’ உருப்பெற்றது.

    MORE
    GALLERIES

  • 36

    சிவனை வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து முருகன் வழிபடும் தலம் - திருச்சியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலா? 

    சிவாலயம் :
    இந்த கோவில் முன்னர் சிவாலயமாக இருந்துள்ளது. முன்னொரு காலத்தில், வேட்டைக்கு சென்ற சோழ மன்னன் கரும்பு ஒன்றை வாளால் வெட்டியபோது, கரும்பிலிருந்து ரத்தம் வடிந்துள்ளது. உடனே சோழ மன்னன் கரும்பு இருந்த இடத்தை பார்க்கையில் சிவலிங்கம் தென்பட்டுள்ளது. பிறகு அங்கு ஆதிநாதர் என்றும் பெயரால் வணங்கி கி.பி. 9ம் நூற்றாண்டில் ஆலயமும் எழுப்பியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. ராஜகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் கட்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 46

    சிவனை வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து முருகன் வழிபடும் தலம் - திருச்சியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலா? 

    கிருபானந்த வாரியாரும் வழிபாடு :
    இந்த வயலூர் முருகப் பெருமான் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் இணைந்து, முருகப் பெருமான் இங்குள்ள ஈசனை வழிபடுகிறார் என்பது ஐதீகமாக உள்ளது. தனி சன்னதியில் வள்ளி - தெய்வானை சமேதராக காட்சி தருகிறார் வயலூர் முருகப் பெருமான். இந்த முருகப் பெருமானை கிருபானந்த வாரியரும் வழிபட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 56

    சிவனை வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து முருகன் வழிபடும் தலம் - திருச்சியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலா? 

    பரிகாரம் மற்றும் வழிபாடு :
    திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. ஆண்டு முழுக்க பக்தர்கள் இங்கு வந்து கூடி முடி இறக்குதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், காது குத்தல், சஷ்டி விரதம் இருத்தல், ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தல், பெண்கள் கும்பிடு தண்டமும், அடிப் பிரதட்சணமும் செய்வது என பல நேர்த்திக்கடன்கள் செய்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 66

    சிவனை வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து முருகன் வழிபடும் தலம் - திருச்சியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலா? 

    திருமணத்தடை நீங்கும் :
    திருமணத்தடை நீங்கவும், நாக தோஷம் மற்றும் குழந்தை பேறு இல்லாதவர்களும் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

    MORE
    GALLERIES