முகப்பு » புகைப்பட செய்தி » யுனெஸ்கோ விருது.. பெரிய கோபுரம்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

யுனெஸ்கோ விருது.. பெரிய கோபுரம்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

Srirangam Temple | திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சாமியால், இவ்வளவு பெருமைகளாக என்றால், நீங்களே ஒரு நிமிடம் ஆச்சரியப்படுவீர்கள். ரங்கநாதன் சாமியால், திருச்சிகாரங்களுக்கும் இந்த பெருமை சேர்ந்துள்ளது எனலாம். 

  • 16

    யுனெஸ்கோ விருது.. பெரிய கோபுரம்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

    ஸ்ரீரங்கம் ரங்கநாதரால் இவ்வளவு பெருமைகளாக என்றால், நீங்களே ஒரு நிமிடம் ஆச்சரியப்படுவீர்கள். ரங்கநாதரால் திருச்சிக்காரங்களுக்கும் இந்த பெருமை சேர்ந்துள்ளது எனலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    யுனெஸ்கோ விருது.. பெரிய கோபுரம்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

    முதல் தலம் :
    திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (ரங்கநாதர் கோவில்) 108 வைணவ திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    யுனெஸ்கோ விருது.. பெரிய கோபுரம்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

    தென்னிந்தியாவில் பெரிய கோபுரம் :
    பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. இது 17ம் நூற்றாண்டை சேர்ந்ததாயினும், 1987ம் ஆண்டு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முதல் திவ்விய தேச தலம்.

    MORE
    GALLERIES

  • 46

    யுனெஸ்கோ விருது.. பெரிய கோபுரம்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

    நவதீர்த்தங்கள் :
    1. சந்திர புசுகரணி
    2. வில்வ தீர்த்தம்
    3. சம்பு தீர்த்தம்
    4. பகுள தீர்த்தம்
    5. பலாச தீர்த்தம்
    6. அசுவ தீர்த்தம்
    7. ஆம்ர தீர்த்தம்
    8. கதம்ப தீர்த்தம்
    9. புன்னாக தீர்த்தம்

    MORE
    GALLERIES

  • 56

    யுனெஸ்கோ விருது.. பெரிய கோபுரம்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

    சங்க கால புகழ்கள் :
    சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரை காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிக பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேசன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினை சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    யுனெஸ்கோ விருது.. பெரிய கோபுரம்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

    முதல் விருது பெற்ற கோயில் :
    ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளில் உள்ள கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனஸ்கோ அமைப்பு, திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு கலாச்சார பாரம்பரியம் போன்ற பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கோயிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES