முகப்பு » புகைப்பட செய்தி » சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!

சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!

Samayapuram Mariamman Temple | திருச்சி என்றவுடன் மலைக்கோட்டையும், அங்குள்ள கோவில்களும் தான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் சமயபுரம் மாரியம்மன் கோவில் எப்படி உருவானது என்று பார்த்தால், நமக்கு ஆச்சரியப்பட வைக்கிறது.

  • 16

    சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!

    என்றவுடன் மலைக்கோட்டையும், அங்குள்ள கோவில்களும் தான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் சமயபுரம் மாரியம்மன் கோவில் எப்படி உருவானது என்று பார்த்தால், நமக்கு ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும், எப்படி சமயபுரம் என்று வந்தது என்று பார்த்தால் மேலும் நம்மை மிரள வைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 26

    சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!

    இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும், கோட்டையையும் உண்டாக்கி கொடுத்த இடமாக கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது.

    MORE
    GALLERIES

  • 36

    சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!

    அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினர்.

    MORE
    GALLERIES

  • 46

    சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!

    பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென் மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டு சென்றனர். அப்போது, காட்டு வழியாக சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையை பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களை கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபட தொடங்கினர்.

    MORE
    GALLERIES

  • 56

    சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!

    அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்.

    MORE
    GALLERIES

  • 66

    சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!

    அதன்படி வெற்றிபெறவே, கோவிலை கட்டினார். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனியாக கோவில் அமைத்தார் என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.

    MORE
    GALLERIES