முகப்பு » புகைப்பட செய்தி » திருச்சி » திருச்சி காவிரி பாலம் மூடல்... முதல் நாளே கடும் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்...

திருச்சி காவிரி பாலம் மூடல்... முதல் நாளே கடும் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்...

Tiruchirappalli | சீரமைப்புப் பணிகளுக்காக திருச்சியில் சிந்தாமணி பகுதியில் உள்ள காவிரி பாலத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

  • 15

    திருச்சி காவிரி பாலம் மூடல்... முதல் நாளே கடும் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்...

    சிந்தாமணியையும் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் மாநகரின் பிரதான போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஆனாலும், பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மீண்டும் பாலம் பழுதடைந்தது.

    MORE
    GALLERIES

  • 25

    திருச்சி காவிரி பாலம் மூடல்... முதல் நாளே கடும் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்...

    இதனால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் அந்தப் பாலம் நவீன முறையில் சீரமைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

    MORE
    GALLERIES

  • 35

    திருச்சி காவிரி பாலம் மூடல்... முதல் நாளே கடும் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்...

    அதன்படி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி பாலத்தின் இருபுறம் இருசக்கர வாகனங்கள் தவிா்த்து மற்ற வாகனங்கள் செல்லமுடியாத வகையில் காவல்துறையினா் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனா்.

    MORE
    GALLERIES

  • 45

    திருச்சி காவிரி பாலம் மூடல்... முதல் நாளே கடும் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்...

    மாற்று பாதையாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பயன் படுத்தப்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை கொண்டயம்பேட்டை பகுதியில் இருந்து காவிரி பாலம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்

    MORE
    GALLERIES

  • 55

    திருச்சி காவிரி பாலம் மூடல்... முதல் நாளே கடும் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்...

    நேற்று முதல் நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதற்கே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வோர் அதிகளவு  தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தியதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.  பராமரிப்பு பணிகள் 5 மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES