முகப்பு » புகைப்பட செய்தி » திருச்சி » 21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

Erumbeeswarar Temple : 21 திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலில் இருக்கும் தீர்த்தம் 21 தலைமுறை பாவங்களையும் போக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். 

  • 19

    21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

    - நெடுஞ்சாலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவெறும்பூர். இங்கே எறும்புகளுக்காக தலைசாய்த்த சிவன் அருள்புரியும் எறும்பீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

    இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவில் வந்து வழிபட்ட சிறப்புவாய்ந்த தலமான இது, சோழநாட்டு தென்கரை கோவில்களில் 7வது ஸ்தலமாகும். அகத்தியர் முருகனிடம் ஞான உபதேசம் பெற்ற ஸ்தலமும் இதுவே. இங்கிருக்கும் பிரம்ம தீர்த்தம் 21 தலைமுறையில் செய்த பாவங்களையும் போக்கும் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ள தலமும் இதுவே.

    MORE
    GALLERIES

  • 39

    21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

    தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தின் பலனால், தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். இந்திரனை தோற்கடித்து தேவலோகத்தை கைப்பற்றினான். தோல்வியுற்ற இந்திரன் பிரம்மனிடம் முறையட, அவர், தென்கயிலாயமான மணிக்கூட புரத்துப் பெருமானை வழிபடுமாறும், அப்போது ஒரு புதல்வன் தோன்றுவான் என்றும், அவனே அந்த தாருகாசுரனை அழிப்பான் என்றும் கூறினார்.

    MORE
    GALLERIES

  • 49

    21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

    தொடர்ந்து, தாங்கள் இறைவனை வழிபடுவதை அசுரன் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்பாக, இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவில் வந்து இறைவனை வழிபட்டனர். அப்போது தனது திருமுடி சாய்த்து எறும்புகளுக்கு இறைவன் திருவருள் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 59

    21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

    திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமான இந்த எறும்பீஸ்வரர் கோவில் திகழ்கிறது. நாவுக்கரசர் ‘இன்பமும் பிறப்பும் இறப்பினொடு துன்பமும் உடனே வைத்த சோதியான்’ என்று பாடுகிறார். திருவாசகத்தில் மாணிக்கவாசகரோ ‘யானை முதலா எறும்பு ஈறாக ஊனமில் யோனியின்’ என்று புகழ்ந்து பாடுகிறார். இதேபோல் ஏராளமான பாடல்கள் இந்த கோவிலை பற்றியும், இறைவனை போற்றியும் பாடப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 69

    21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

    இந்த கோவிலில் புற்று மண்ணால் ஆன சுயம்பு நாதரான இறைவனுக்கு எறும்பீசர் என்று அழைக்கப்படுகிறார். 

    MORE
    GALLERIES

  • 79

    21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

    அம்பாள் பார்வதிதேவியோ நறுங்குழல் நாயகி, சுகந்த குழலாள், சௌந்தர நாயகி, மதுவன ஈஸ்வரி மற்றும இரத்னாம்பாள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

    MORE
    GALLERIES

  • 89

    21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

    ஒரு சிறு குன்றின் மீது அமைந்து, பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலில் சுமார் 45க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பரகேசரிவர்மன், ராஜகேசரிவர்மன், 3ம் ராஜராஜசோழன், சுந்தரபாண்டியன் என்று பல்வேறு மன்னர்கள் திருப்பணிகள் செய்திருப்பது தெரியவந்துள்ளது. எறும்புகளுக்கும் அருள்புரிந்த இறைவன் எழுந்தருளிய தலமாதலால் இந்த ஊரும் திருவெறும்பூர் என்றே பெயர் பெற்றது.

    MORE
    GALLERIES

  • 99

    21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

    இந்த கோவிலில் இருக்கும் பிரமதீர்த்தம் 21 தலை முறை பாவங்களையும் போக்கும் என்றும், இந்த கோவிலில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் தீரும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இது ஆன்மிக தலமாக மட்டும் அல்லாமல் சிறந்த சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES