இதன் படி ஜோசிலா கணவாய்க்கு கீழ் 3000 மீட்டருக்கு கீழ் 14.15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையானது அமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக உள்ள நெடுஞ்சாலை போலில்லாமல் அதிக பனிப்பொழிவு, குளிர், என எத்தகைய வானிலையிலும் இந்த தேசிய நெடுஞ்சாலையானது இயங்கும் என்றும், இதற்கேற்ப தான் இதன் கட்டுமானப் பணிகள் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த பாதையை மக்கள் ஜம்மு மற்றும் லடாக் இடையே போக்குவரத்து சேவைக்குப் பயன்படுத்தும் போது பயண நேரம் என்பது 4 மணி நேரத்திலிருந்து 40 நிமிடமாக குறையும் எனவும் அரசு தெரிவிக்கிறது.
ஜோசிலா சுரங்கப்பாதையானது ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையாக அமையும் எனவும், ஏற்கனவே கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட பாதி முடிந்து விட்டதால், திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்பே திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதையாக இது இருக்கும் எனவும், ஜம்மு காஷ்மீர், லடாக் இடையே பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக கலாச்சார ஒருங்கிணைப்பை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்கின்றனர் மத்திய அமைச்சர்கள்.
ஆசியாவிலேயே மிக நீளமான ஜோசிலா சுரங்கப்பாதை அமைப்பதற்கானத் திட்டத்தை எல்லைகள் சாலை அமைப்பு, கடந்த 2013 ஆம் ஆண்டு தயாரித்தது. இதனையடுத்து இதற்கான டென்டர் எடுக்கப்பட்ட போது 4 முறை தோல்வியில் தான் முடிந்தது. பின்னர் இறுதியாக இந்த சுரங்கப்பாதைக்கான டென்டர் ஐடிஎன்எஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டதோடு, இப்பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் பிரதமர் மோடி.