சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் 2021-ன் 14வது சீசனில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சிஎஸ்கே அணி அட்டகாசமாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை நடந்த 7 போட்டிகளில் 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் IPL 2021-ன் மிச்சமிருக்கும் போட்டிகள் மீண்டும் நடக்கவுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களுக்காக சென்றுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
மேலும் சிம்லாவின் பாரம்பரிய டோப்பி (தொப்பி) அணிந்திருப்பதையும் காண முடிகிறது. இந்த பாரம்பரியமான மற்றும் ஸ்டைலான தலைக்கவசம் 'குலு டோபி' என்று அழைக்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் புதிய தோற்றம் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.