பெண்கள் என்றாலே எதையும் தெளிவோடும், நுணுக்கமாக முடிக்கும் திறன் உள்ளவர்கள் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார பெண்மணி பட்டியலில் இடம் பிடித்துள்ள தமிழகத்துப் பெண் ராதா வேம்பு.. பணியாளராக மட்டுமில்லாது, பலருக்கு வேலைவாய்பை வழங்கும் அளவிற்கு உயர்ந்தது எப்படி? என்ன சாதித்துள்ளார்? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.
யார் இந்த ராதா வேம்பு? : தமிழகத்தைச் சேர்ந்த ராதா வேம்பு கடந்த 1972 ல் பிறந்தவர். இவரது தந்தை சாம்பமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராகப் பணிபுரிந்தவர். ராதா வேம்புவிற்கு நான்கு சகோதாரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். சென்னை ஐஐடி நிறுவனத்தில் தொழிற்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்ற ராதா, கடந்த 1988 ஆம் ஆண்டு ராஜேந்திரன் தண்டபாணி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆதித்யா ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார்.
ஜோஹோ நிறுவனத்தின் திட்ட மேலாளராக : சென்னையை தலைமையிடமாக கொண்ட ஜோஹோ (Zoho) நிறுவனம், ஸ்ரீதர் வேம்புவால் தொடங்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகம் முழுவதும் ஒன்பது நாடுகளில் கிட்டத்தட்ட 12 அலுவலகங்களைக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜோஹோ மெயிலின் திட்ட மேலாளராக ராதா வேம்பு பதவியேற்றார். இந்த நிறுவனத்தில் இவருக்கென்று பெரும்பான்மையாக பங்குகள் உள்ளன. ஜோஹோ மெயில் திட்ட மேலாளராக பதவி வகித்த பின்னர் 250 குழுவிற்குத் தலைமைத் தாங்குகிறார் ராதா வேம்பு.