முகப்பு » புகைப்பட செய்தி » திருவாரூர் » பால் குடம் சுமந்து சென்று சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம்... பக்தர்கள் பரவசம்!

பால் குடம் சுமந்து சென்று சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம்... பக்தர்கள் பரவசம்!

Thiruvarur Saibaba temple | 300க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்.

  • 17

    பால் குடம் சுமந்து சென்று சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம்... பக்தர்கள் பரவசம்!

     சாய்பாபா கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    MORE
    GALLERIES

  • 27

    பால் குடம் சுமந்து சென்று சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம்... பக்தர்கள் பரவசம்!

    திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வாசன் நகர் பகுதியில் ஸ்ரீ ஸ்கந்த சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் எட்டாம் ஆண்டு குடமுழுக்கு விழா தினத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பெண்கள் மாலை அணிந்து விரதமிருந்து செவ்வாடை அணிந்து பால் குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    MORE
    GALLERIES

  • 37

    பால் குடம் சுமந்து சென்று சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம்... பக்தர்கள் பரவசம்!

    மேலும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக இந்த பால் கூட ஊர்வலம் தெற்கு வீதி பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ வீதி தெற்குவீதி வடக்கு வீதி வழியாக தேரோடும் வீதிகளில் வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தது.

    MORE
    GALLERIES

  • 47

    பால் குடம் சுமந்து சென்று சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம்... பக்தர்கள் பரவசம்!

    இந்த பால் கூட ஊர்வலத்திற்கு முன்பாக மேள தாளங்கள் முழங்க காளியாட்டம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 57

    பால் குடம் சுமந்து சென்று சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம்... பக்தர்கள் பரவசம்!

    இந்த பால் குட ஊர்வலம் சாய்பாபா ஆலயத்தில் நிறைவடைந்ததையடுத்து சாய்பாபாவிற்கு பஞ்சாமிர்தம் தேன் பால் மஞ்சள் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று.

    MORE
    GALLERIES

  • 67

    பால் குடம் சுமந்து சென்று சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம்... பக்தர்கள் பரவசம்!

    அதனைத் தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்த பெண் பக்தர்கள் தங்கள் தலையில் சுமந்து வந்த பால் குடத்தில் உள்ள பாலை தங்கள் கைகளாலேயே சாய்பாபா மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 77

    பால் குடம் சுமந்து சென்று சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம்... பக்தர்கள் பரவசம்!

    தொடர்ந்து சாய்பாபாவிற்கு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி எடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    MORE
    GALLERIES