முகப்பு » புகைப்பட செய்தி » திருவண்ணாமலை » ஆரணியில் கேட்பாரற்று கிடக்கும் காதல் கண்ணாடி மாளிகை... புராதன சின்னம் சீரமைக்கப்படுமா?

ஆரணியில் கேட்பாரற்று கிடக்கும் காதல் கண்ணாடி மாளிகை... புராதன சின்னம் சீரமைக்கப்படுமா?

Tiruvannamalai News : ஆரணியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை கேட்பாரற்று கிடக்கிறது. செய்தியாளர் : மோகன்ராஜ் - ஆரணி 

  • 17

    ஆரணியில் கேட்பாரற்று கிடக்கும் காதல் கண்ணாடி மாளிகை... புராதன சின்னம் சீரமைக்கப்படுமா?

    மாவட்டம் ஆரணி அருகே ஆரணி - சாலை பகுதியிலிருந்து சுமார் 3 தொலைவில் பூசிமலைக்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1806ம் ஆண்டு திருமலைராவ் தன்னுடைய காதல் மனைவிக்காக கண்ணாடி மாளிகை ஒன்றை கட்டினார்.

    MORE
    GALLERIES

  • 27

    ஆரணியில் கேட்பாரற்று கிடக்கும் காதல் கண்ணாடி மாளிகை... புராதன சின்னம் சீரமைக்கப்படுமா?

    இந்த கண்ணாடி மாளிகை தற்போது 217 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த கட்டிடமாக உள்ளது. கடந்த 70 ஆண்டுக்கு மேலாக வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் இந்த மாளிகை இயங்கி வந்தது.

    MORE
    GALLERIES

  • 37

    ஆரணியில் கேட்பாரற்று கிடக்கும் காதல் கண்ணாடி மாளிகை... புராதன சின்னம் சீரமைக்கப்படுமா?

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கண்ணாடி மாளிகை வனத்துறைக்கு சொந்தமானது என தெரியவந்ததால் வனத்துறையினர் முழு கட்டுப்பாட்டில் காதல் கண்ணாடி மாளிகையை மீட்டெடுத்தனர்.

    MORE
    GALLERIES

  • 47

    ஆரணியில் கேட்பாரற்று கிடக்கும் காதல் கண்ணாடி மாளிகை... புராதன சின்னம் சீரமைக்கப்படுமா?

    மேலும் ஆரணி சரக வனத்துறையினர் கண்ணாடி மாளிகையை சுற்றி வேலி அமைத்து வனத்துறைக்கு சொந்தமான இடமான அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும் ஆரணியின் புராதன சின்னமாக விளங்கும் பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகையை சுற்றுலாத்தலமாக மாற்றி அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆரணியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை விடுத்தனர்.

    MORE
    GALLERIES

  • 57

    ஆரணியில் கேட்பாரற்று கிடக்கும் காதல் கண்ணாடி மாளிகை... புராதன சின்னம் சீரமைக்கப்படுமா?

    இதையடுத்து, தமிழக சட்டசபையில் கடந்த 2022ம் ஆண்டு பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு சுமார் 11 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 67

    ஆரணியில் கேட்பாரற்று கிடக்கும் காதல் கண்ணாடி மாளிகை... புராதன சின்னம் சீரமைக்கப்படுமா?

    ஆனால் தற்போது 10 மாதங்களுக்கு மேலாகியும் பூசிமலைகுப்பம் கிராமத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் எந்த பணியும் தற்போது வரையில் சிறிதளவும் நடைபெறவில்லை. இதனால் பூசிமலைக்குப்பம் கிராமத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 77

    ஆரணியில் கேட்பாரற்று கிடக்கும் காதல் கண்ணாடி மாளிகை... புராதன சின்னம் சீரமைக்கப்படுமா?

    மேலும் 11 கோடி ரூபாய் நிதி ஓதுக்கி பணி கேட்பாரற்று உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடித்து கண்ணாடி மாளிகையை சுற்றுலாத்தலமாக மாற்றி அமைக்க நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அதேபோல் படவேடு பகுதியில் உள்ள கல்வெட்டுகள் புராதன சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES