முகப்பு » புகைப்பட செய்தி » திருநெல்வேலி » பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

Manjolai Tour | திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு அணைக்கு மேலே இருக்கும் மாஞ்சோலையானது பசுமையும் இயற்கையின் அழகும் கொண்ட பகுதியாகும். இது சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக இருந்து வருகிறது.

  • 18

    பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

    மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக்கு மேலே இருக்கும் மாஞ்சோலைப் பகுதியில் உள்ள குதிரைவெட்டி, நாலுமுக்கு, மலைப் பிரதேசததிற்கு மேலே சுமார் 4,800 அடி உயரத்தில் அப்பர் அணை உள்ளிட்டவை அமைந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 28

    பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

    இந்த மாஞ்சோலை பகுதியில் குதிரைவெட்டி உள்ளிட்ட 5 தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. பசுமை நிறைந்த இந்த தோட்டங்கள் மனதை மயக்கும் தன்மை கொண்டவை. இதன் அழகை நேரில் அனுபவிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 38

    பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

    இங்கே செல்ல வேண்டும் என்றால், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும். மேலும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமுத்தாறு சுங்கச்சாவடியில் உரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 48

    பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

    ஊட்டி, கொடைக்கானல் பேன்ற மலை சுற்றுலா தளங்களை போல இங்கே யாரும் அவ்வளவு எளிதில் சென்றுவிட முடியாது. இங்கே கட்டுப்பாடு முறைகள் அதிகமாக உள்ளன. பைக்கில் செல்வதற்கு அனுமதி இல்லை. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு பேருந்துகள் மட்டும்தான் தான் மாஞ்சோலை குதிரை வெட்டி ,ஊத்து வரை சென்று வரும்.

    MORE
    GALLERIES

  • 58

    பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

    இங்கே சென்றால் கல்லிடைக்குறிச்சியைத் தாண்டி மலை மீது ஏற ஆரம்பிக்கும்போது மணிமுத்தாறு அணையையும், மணிமுத்தாறு அருவியையும் தாண்டி மாஞ்சோலை செல்ல வேண்டும். இங்கிருக்கும் அருவி மிகவும் முக்கியமான இடம்.

    MORE
    GALLERIES

  • 68

    பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

    அருவியில் சில்லென்று கண்ணாடிபோன்ற சுத்தமான நீரை பார்க்க முடியும். இந்த அருவிக்கு மேல் பயணித்தால் மாஞ்சோலை. இங்பே குளிர் காற்று நம் வருடிச் செல்வதை உணர முடியும்.

    MORE
    GALLERIES

  • 78

    பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

    இந்த மாஞ்சோலை பகுதில், இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. எனவே, மாலை 6 மணிக்குள் மலையில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 88

    பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

    பசுமை அழகும் குளிச்சியும் நிறைந்த மணிமுத்தாறு - மாஞ்சோலை பாதையில் உள்ள மரங்கள், தேயிலைத் தோட்டங்களைக் கடந்து செல்வதும் வாழ்நாளில் மறக் முடியாத அனுபத்தை கொடுக்கும். மாஞ்சோலை வெறும் தேயிலைத் தோட்டமோ, சுற்றுலாத் தலமோ மட்டும் அன்றி, இது புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதை சுற்றுலா பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES