முகப்பு » புகைப்பட செய்தி » திருநெல்வேலி » நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

Kuthirapanjan Falls / Panagudi Falls : குத்திரபாஞ்சான் அருவியில் இருந்து பாய்ந்துவரும் குளிர்ந்த நீரானது, கன்னிமார்கள் தோப்பு என்ற தடுப்பணைக்கு செல்கிறது. இந்த இடமும் குளித்து மகிழ ஏற்ற அருமையான இடமாகும்.

  • 19

    நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

    மாவட்டதில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. இங்கே அதிகம் அறியப்படாத பல அருவிகள் இருக்கின்றன. அந்த வகையில் பணக்குடி அருவி என்று அழைக்கப்படும் ‘குத்திரபாஞ்சான் அருவி’ குழந்தைகளுடன் குடும்பத்தோடு குளிப்பதற்கு ஏற்ற அருவியாகும்.

    MORE
    GALLERIES

  • 29

    நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

    ‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ என்று திருஞான சம்பந்தர் போற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கோவில்கள், அருவிகள், அணைகள், பூங்காக்கள் என்று ஏராளமான சுற்றலா தலங்கள் இருக்கின்றன. அந்த வகையில் குத்திரபாஞ்சான் அருவி பரவலாக அறியப்படாத குடும்பத்துடன் குளித்து மகிழ்வதற்கு ஏற்ற அருவியாகும்.

    MORE
    GALLERIES

  • 39

    நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

    இந்த குத்திரபாஞ்சான் அருவியானது நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சியில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் சில்லென்று கொட்டும் தெளிந்த நீரைக்கொண்டு காட்சியளிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 49

    நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அருவியானது, சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் மட்டுமே செங்குத்தாக பாய்ந்து வரும் இந்த அருவியில் தண்ணீர் வரத்து அதிக அளவில் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 59

    நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

    பல அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக பாய்வதால் இந்த அருவிக்கு குத்திரபாஞ்சான் அருவி என அழைக்கபடுவதாகவும், மூலிகை கலந்த தெளிந்த தண்ணீர் இந்த அருவியில் இருந்து கொட்டுவதால், இங்கே குளிப்பது உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

    MORE
    GALLERIES

  • 69

    நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

    இயற்கையின் அற்புதமாக விளங்கும் இந்த அருவிக்கு அருகில் வாகனங்களில் செல்ல போதிய பாதை வசதி இல்லாததால், கரடு முரடான மலைப் பாதையில் சிறிது தூரம் செல்ல வேண்டி இருக்கும். எனவே வாகனங்களில் வருபவர்கள் அருவிக்கு சற்று தொலைவில் இருக்கும் பார்க்கிங்கில் உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு நீரோடும் ஆற்றை கடந்து நடந்து வந்து இந்த அருவியை அடைய வேண்டி இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 79

    நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

    இந்த குத்திரபாஞ்சான் அருவிக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு அருகில் வனத்துறையினருக்கு சொந்தமான கடை ஒன்று இருக்கிறது. அங்கு சிறுவர்கள் விரும்பும் திண்பண்டங்கள் விற்கப்படுகின்றன. மற்றபடி நீங்கள் வீட்டில் இருந்தோ அல்லது, முன்னதாக இருக்கும் உர்களில் இருந்தோ உணவை கொண்டு வருவது நல்லது.

    MORE
    GALLERIES

  • 89

    நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

    குத்திரபாஞ்சான் அருவியில் ஆசைதீர குளித்து மகிழ்ந்த பின்னர், ஈரமான இருக்கும் துணையைகளை மாற்றுவதற்கு வசதியாக அங்கே உடைமாற்றும் அறை மற்றும் கழிப்பறை வசதியும் இருக்கிறது. எனவே நிம்மதியாக வந்து குளித்துவிட்டு ரிலாக்ஸாக செல்லலாம்.

    MORE
    GALLERIES

  • 99

    நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

    குத்திரபாஞ்சான் அருவியில் இருந்து பாய்ந்துவரும் குளிர்ந்த நீரானது, கன்னிமார்கள் தோப்பு என்ற தடுப்பணைக்கு செல்கிறது. இந்த இடமும் குளித்து மகிழ ஏற்ற அருமையான இடமாகும். இங்கே சுற்றுவட்டார பகுதிகளல் இருந்து மட்டும் அல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து என்ஜாய் அடைகின்றனர்.

    MORE
    GALLERIES