முகப்பு » புகைப்பட செய்தி » தூத்துக்குடி » தைப்பூச திருவிழா... செந்தூர் கடலில் களைக்கட்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி! பக்தர்கள் பரவசம்!

தைப்பூச திருவிழா... செந்தூர் கடலில் களைக்கட்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி! பக்தர்கள் பரவசம்!

Tiruchendur thaipoosam | திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாலை அணிந்து வந்த பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  • 15

    தைப்பூச திருவிழா... செந்தூர் கடலில் களைக்கட்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி! பக்தர்கள் பரவசம்!

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    MORE
    GALLERIES

  • 25

    தைப்பூச திருவிழா... செந்தூர் கடலில் களைக்கட்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி! பக்தர்கள் பரவசம்!

    உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.

    MORE
    GALLERIES

  • 35

    தைப்பூச திருவிழா... செந்தூர் கடலில் களைக்கட்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி! பக்தர்கள் பரவசம்!

    தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரக்கூடிய நன்னாளாகும். இந்த நாளில் தான் அன்னை தன் தவப்புதல்வனுக்கு வேல் வழங்கிய நாளாக கருதப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    தைப்பூச திருவிழா... செந்தூர் கடலில் களைக்கட்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி! பக்தர்கள் பரவசம்!

    இன்று தைப்பூசம் திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூபம் தீபாராதனையும், 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 3.00 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7.00 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    தைப்பூச திருவிழா... செந்தூர் கடலில் களைக்கட்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி! பக்தர்கள் பரவசம்!

    தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் காவடி சுமந்தும், அலகுவேல் குத்தியும் பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் கோயிலில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக லட்சகக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இதனால் கோயில் கடற்கரை மற்றும் கோயில் வளாகம் பக்தர்களால் நிரம்பி திருவிழா போல் காட்சியளிக்கிறது.

    MORE
    GALLERIES