முகப்பு » புகைப்பட செய்தி » தேனி » வைகை அணை நீர்மட்டம் உயர்வால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் உயர்வால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Theni | தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது. செய்தியாளர்: பழனிக்குமார், தேனி

  • 16

    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் 136 அடியை நெருங்கியது.  தொடர்ந்து கேரளாவில் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழையால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால் ரூல்கர்வ் அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட்டு முல்லைப் பெரியாறு அணையில்  இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 26

    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    விநாடிக்கு 1,500 முதல் இரண்டாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியது. இதனிடையே தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கொட்டக்குடி, வராக நதி மற்றும் மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்தது.

    MORE
    GALLERIES

  • 36

    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    இதன் காரணமாக  வைகை அணைக்கு நீர்வரத்து  அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி இன்று காலை 6மணிக்கு அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 68.5அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69அடியானதும் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையின் 7மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்படும். எனவே பொதுமக்கள் யாரும் குளிப்பதற்கோ துணி துவைப்பதற்கோ வைகை ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 56

    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    இன்று காலை 6மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 66.01அடியாகவும், நீர் இருப்பு 4,854 மில்லியன் கன அடியாக இருக்கிறது. அணைக்கு விநாடிக்கு 2,288 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் அணையில் இருந்து மதுரை மாநகர் குடிநீருக்காக 69கன அடி நீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    கடந்தாண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் வைகை அணை அதன் முழுக்கொள்ளளவை விரைவில் எட்டக்கூடும் என்பதால் ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES