தேனி மாவட்டம் கம்பம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி. நீர்ப்பிடிப்பு பகுதிகளான இரவங்கலாறு வென்னியாறு உள்ளிட்ட மேகமலை வனப்பகுதிகளில் பெய்த கோடை மழையால் கடந்த செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.