முகப்பு » புகைப்பட செய்தி » தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

Suranganar Falls | நிலச்சரிவால் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அருவி திசை மாறி கேரள மாநிலத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

  • 15

    தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

    நிலச்சரிவால் மாவட்டத்தில் உள்ள ஒரு அருவி திசை மாறி கேரள மாநிலத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 25

    தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பச்சை பசேலென இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் சுரங்கனார் நீர்வீழ்ச்சி உள்ளது. மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் சுரங்கனார் நீர் வீழ்ச்சியாக கொட்டுகிறது.

    MORE
    GALLERIES

  • 35

    தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

    இந்த அருவியில் கொட்டும் தண்ணீர் ஓட்டாண்குளம் என்று அழைக்கப்படும் மைத்தல மன்னடியான் குளத்தில் தேங்குகிறது. இதனால் ஒட்டாண்குளம், ஈஸ்வரன் கோவில் புலம், பாரவந்தான், ஒழுகுவழி சாலை பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

    முல்லைப்பெரியாற்றில் இருந்து வைரவன் வாய்க்கால் மூலம் கூட்டாறு வழியாக வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் இந்த குளத்திற்கு 10 மாதங்களுக்கு திறந்துவிடப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் ஒட்டாண்குளத்திற்கு தண்ணீர் வரும் சுரங்கனார் நீர் வீழ்ச்சி அருகே கடந்த 2011ம் ஆண்டு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

    MORE
    GALLERIES

  • 55

    தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

    ஆண்டுதோறும் சுரங்கனார் நீர் வீழ்ச்சி பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு வரத்து வாய்க்கால் தூர்வாரப்படும். இதனால் தண்ணீர் தங்கு தடையின்றி வரும். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு அந்த பகுதியில் தூர்வார வனத்துறையினர் அனுமதி வழங்காததால் மழை காலங்களில் மணல்மேடுகள் ஏறி அந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாகி கூட்டாறு வழியாக சென்று முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது என்று பாரதீய கிஷான் சங்கம் மாவட்ட தலைவர் சதீஷ் பாபு தெரிவித்துள்ளார்.
    இதனால் 2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி விவசாயிகளும் பயன் அடைந்து வந்தனர். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மத்திய வனத்துறையின் அனுமதி பெற்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று விவசாயிகள் சிலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES