மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!
Thanjavur Periya Kovil : பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம். பக்தர்கள் உள்ளேயும் - வெளியேயும் செல்ல முடியாமல் சிக்கி தவிப்பு. செய்தியாளர் : குருநாதன் - தஞ்சாவூர்
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
2/ 10
இன்று மகா சிவராத்திரி மற்றும் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்பு சாறு உள்ளிட்ட 9 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
3/ 10
பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
4/ 10
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5/ 10
மேலும் தஞ்சை பெரிய கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு 5 கால பூஜைகள் நடைபெற உள்ளது.
6/ 10
மேலும் இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
7/ 10
இதற்காக தற்போது முதலே கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
8/ 10
மேலும் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளே வர முடியாமலும், வெளியே போக முடியாமலும் சிக்கி தவித்து வருகின்றனர்.
9/ 10
கூட்ட நெரிசலில் குழந்தைகள். முதியோர்கள் என அவதியடைகின்றனர்.
10/ 10
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லாததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
110
மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!
இன்று மகா சிவராத்திரி மற்றும் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்பு சாறு உள்ளிட்ட 9 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.