முகப்பு » புகைப்பட செய்தி » தஞ்சாவூர் » காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

Dharasuram Temple | தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களுடன் அழகே வடிவாய் அமைந்த கோவிலாக காட்சியளிக்கிறது.

  • 19

    காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

    நுட்பமான அழகிய சிற்பங்களால் நிறைந்து, உலக மக்களை வியப்பில் ஆழ்த்தும் உன்னத ஆலயம் மாவட்டம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில். கலை பொக்கிஷமான திகழும் இந்த கோவில் யுனெஸ்கோவால், உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

    தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகியவை சோழர்களின் பெருமை பறை சாற்றும் கலைப்படைப்புகள். இவற்றுள் தாராசுரம் கோவிலில் மட்டும 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுட்பமான சிற்பங்களைக் கொண்டதாக திகழ்கிறது.

    MORE
    GALLERIES

  • 39

    காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

    தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இது ராஜராஜேஸ்வரம் என்றும் இறைவன் ராஜராஜப் பெருவுடையார் என்றும் அழைக்கப்பட்டு, பின்னர் இந்திரனின் யானையான ஐராவதம் வழிபட்டு சாபம் நீங்கிய தலம் என்பதால் ஐராவதீஸ்வர என்றும் மாறியதாக ஆய்வாளர்கள் சுறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 49

    காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

    தேர் வடிவிலான இந்த கோவிலை யானைகள் இழுத்துச் செல்வதுபோல அமைக்கப்பட்டுள்ள இந்த கோவில், புதுவிதமான சிவப்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஆலய முகப்பு, கோவிலில் உள்ள மண்டபங்கள், தூண்கள், விமானம் என எங்கு நோக்கினாலும் சிற்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன.

    MORE
    GALLERIES

  • 59

    காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

    கோவிலின் கருவறையைச் சுற்றி அறுத்து மூன்று நாயன்மார்களுடைய கதைகளை எடுத்துக்காட்டும் சிற்பங்கள் மிகவும் நேத்தியாக வடிக்கப்பட்டுள்ளன. திருச்சுற்று மாளிகையின் வடக்கில் 108 சிவாசார்யர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 69

    காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

    இந்த கோவிலில் நடன வகைகள், வீர விளையாட்டுகள், போர்க்காட்சிகளை விவரிகக்கும் நுட்பமான சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. சிற்பக்கலையின் அனைத்துவித வித்தைகளையும் பல்வேறு அளவுகளில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களையும் அதன் அழகையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

    MORE
    GALLERIES

  • 79

    காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

    இவ்வளவு நுட்பமாக சிலைகளை வடிக்க முடியும்? என்று கண்களை அகல விரித்து வியக்கும் வகையில், ஒரு சிறிய இடத்தைகூட விட்டுவைக்கவில்லை என்று கூறும் அளவுக்கு ஏராளமான சிற்பங்களை இங்கே பார்கக முடியும், ‘அடிக்கு 1000 சிற்பங்கள்’ என்ற புகழ் மொழியையும் கொண்ட கோயிலாகத் திகழ்கிறது இந்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில். ஒரே சிற்பத்தில் காளையும், பாணையும் வடிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு புறத்தை மறைத்துப் பார்த்தால் யானை தெரியும், மறு புறத்தை மறைத்துப் பார்த்தால் காளை தெரியும்.

    MORE
    GALLERIES

  • 89

    காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

    கோயிலுக்கு வெளியே நந்தி மண்டபத்துக்கு அருகே பலிபீடத்துக்கு ஏறும் படிகள் ஏழு ஸ்வரங்களை இசைக்கும் இசைப் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. எழு படியும் ஏழு ஸ்வரங்களான ‘ச ரி க ம ப த நி’ ஆகியவற்றின் ஓசையை எழுப்பும் என்கின்றனர். பாதுக்ப்பு கருதி இந்த இசை படிக்கட்டு இரும்பு கம்பி அமத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 99

    காணக்கிடைக்காத கலையழகு... 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் - உலகம் வியக்கும் தாராசுரம்!

    இந்த தாராசுரம் கோயிலில் வேறெங்கும் காணமுடியாத, காணக்கிடைக்காத சிற்பங்களையும் பார்க்கலாம். சிற்பங்களின் கலையழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். நாள் முழுவதும் பார்த்தாலும், பாதி சிற்ங்களைச்சுட பார்த்துவிடமுடியாது. அத்தனை அழகான, நுட்பமான் சிறங்களும் இங்கே நிறைந்திருக்கின்றன. தஞ்சாவூர் சுற்றுலா லிஸ்டில் இது எக்காரணத்தைக் கொண்டும் மிஸ்ஸாகக்கூடாத சிறந்த சுற்றுலா தலமாகும்.

    MORE
    GALLERIES