முருகனின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு படைவீடுகளைப்போல, மாநகரில் கோலில்கள் அமைந்துள்ளன. இநத் ஆறு கோவில்களிலும் தஞ்சாவூருக்குள்ளேயே அமைந்துள்ள ஆறு படைவீடுகளாக போற்றப்பட்டு வருகின்றன. இந்த ஆறு படைவீடுகளுக்கும் முருக பக்தர்கள் பாதயாத்திரை சென்று வழிபடுகின்றனர். இந்த கோவில்கள் அமைந்துள்ள இடங்களையும், இவற்றின் சிறப்புகளையும் இங்கே காண்போம்.
முதல் படைவீடு : தஞ்சாவூர் மாவட்டம் மேல அலங்கம் பகுதியில் அமைந்திருக்கிறது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவிலின் மூலவர், குன்றின் மேல் இருப்பது போல் உயரமான இடத்தில் இருப்பதால், இந்த தலம் ‘திருப்பரங்குன்றம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கே வள்ளி - தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார்.
இரண்டாம் படைவீடு : தஞ்சைசாவூலில் உள்ள பூக்கார தெருவில் இருக்கும் சுப்பிர மணியசாமி கோவிலில் முருகப்பெருமான் மனைவிகள் இன்றி தனித்து அருள் புரிகிறார். திருச்செந்தூரில் வாழ்ந்த ஞானி ஒருவர், ஐம்பொன்னாலான முருகன் சிலைக்கு தினமும் கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராட்டி பூஜைகள் செய்து வந்தார். அவர் வயோதிகம் காரணமாக அந்த சிலையை வேறுயாரிடமாவது ஒப்படைக்க எண்ணினார்.
இந்நிலையில் ஒரு நாள் அந்த ஞானியின் கனவில் தோன்றிய முருகன், அவரை ஒரு ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த ரயில்வே ஊழியரிடம் அந்த ஐம்பொன் சிலையை கொடுக்கும்படி கூறிவிட்டு மறைந்தார். கனவில் வந்ததுபோலவே, அந்த ரயில்நிலையம் சென்ற ஞானி, ரயில்வே ஊழியரை சந்தித்தார், அந்த ஊழியரும், தனக்கும் இந்த வந்ததாக கூறினார். பின்னர் அந்த சிலையைப் பெற்று, தஞ்சாவூர் வந்த அந்த ரயில்வே ஊழியர் இங்கு ஒரு குடில் அமைத்து முருகனை வழிபட்டார் என்றும் அதுவே இந்த கோவிலாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் இங்கேயே பிரார்த்தனை செய்யலாம் என்கின்றனர்.
மூன்றாம் படைவீடு : தஞ்சாவூர் சின்ன அரிசிக்கார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் மூன்றாம் படைவீடு என்று போற்றப்படுகிறது. இங்கே முருகப்பெருமானின் அருகில் இருக்கும் மயில் வாகனம் இங்கே காணப்படவில்லை. மாறாக யானை இருக்கிறது. இந்த கோவிலில் சிவன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன், இடும்பன், நவக்கிரக சன்னிதிகள், ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், பைரவர், நாகநாதர் உள்ளிட்ட சன்னிதிகள் இருக்கின்றன. இந்தக் கோவிலில் பங்குனி உத்திரம், சஷ்டி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் இந்திரன் வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.
நான்காம் படைவீடு : ஆட்டுமந்தை தெருவில் இருக்கிறது சுவாமிநாத சுவாமி கோவில் . இது சுவாமி மலையில் முருகன் சன்னிதி இருப்பது போலவே இங்கும் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்ஙேக பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், நவக்கிரக தலங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை, இடும்பன் போன்ற சன்னிதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் இடம் பெற்றுள்ளன. இங்கே சூரசம்ஹாரம், முருகன் திருக்கல்யாணம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
ஐந்தாம் படைவீடு : கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் ஐந்தாம் படைவீடு என்று அழைக்கப்படுகிறது. திருத்தணியில் முருகன் இருப்பதை போல உள்ள முருகப்பெருமான் இங்கே வள்ளி- தெய்வானையுடன் அருள்புரிகிறார். திருஞானசம்பந்தருக்கும் இங்கு இங்கே தனி சன்னிதி இருக்கிறது. விநாயகர், விசாலாட்சி, பைரவர், பஞ்சமுக ஆஞ்சநேயர், துர்க்கை, நவக்கிரக தலங்கள் உள்ளிட்ட சன்னிதிகளும் உள்ளன. இந்த கோவிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் எனவும் நம்பப்படுகிறது.
ஆறாம் படைவீடு: வடக்கு அலங்கம் பகுதியில் ஒரு பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் இருக்கிறது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று வர பல நாட்கள் ஆனதால், பழனியைப் போலவே இங்கும் அமைந்து, பழனி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து நிறுவியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இது ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.