முகப்பு » புகைப்பட செய்தி » தென்காசி » குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

Courtallam falls | தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவிக்கு மேலே அமைந்திருக்கும் செண்பகாதேவி கோவிலில் சித்ரா பௌர்ணமி வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • 114

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    மாவட்டம் குற்றாலத்தில் சித்திரா பௌர்ணமி அன்று செண்பகாதேவி கோவிலில் வெகு விமர்சையாக வழிபாடுகள் நடைபெறும். பொதுவாக செண்பகாதேவி கோவிலுக்கு பௌர்ணமி நாட்களில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் மற்ற நாட்களுக்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    MORE
    GALLERIES

  • 214

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    சித்திரை மாதம் வரும் பௌர்ணமியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குற்றால மெயின் அருவிக்கு மேலே அமைந்திருக்கும் செண்பகாதேவி கோவிலுக்கு வருகை தருவார்கள். அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி அன்றும் செண்பகா தேவி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகை தந்திருந்தார்கள். கொடுத்த பின்பு பொதுமக்கள் மலைக்கு மேலே செண்பகாதேவி அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 314

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பாறைகளை கடந்து 2 கிலோ மீட்டர் வனப்பகுதியில் நடந்தால் செண்பகாதேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்தால் நினைத்தது நடக்கும் என்று இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 414

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பாறைகளையும் படிகளையும் கடந்து இரண்டு கிலோமீட்டர் மலை ஏறி வந்தால் செண்பகாதேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட அடர்ந்த காட்டின் நடுவே அமைந்திருக்கிறது. இந்த செண்பகாதேவி அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் திருமணம் ஆகும் போன்ற பல நம்பிக்கையுடன் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 514

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    அகத்திய முனிவர் பொதிகை மலைக்கு செல்லும் பொழுது திரிகூட மலை வந்தடைந்தார் அப்பொழுது செண்பகாதேவி அம்மனிடம் திரி கூட மலைக்கு செல்லும் ரகசிய சூட்சமங்களை கேட்டறிந்ததாகவும் செவி வழி செய்திகள் கூறுகிறது.

    MORE
    GALLERIES

  • 614

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    மேலும் செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி பொழுது மட்டும் தான் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் மற்ற நேரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.மேலும் இங்கு சித்ரா பௌர்ணமி இந்த கோயிலில் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 714

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    வனத்துறையினரிடம் ஆதார் கார்டு நகல் கொடுத்து வனத்துறையின் கண்காணிப்பில் தான் இந்த செண்பகாதேவி திருக்கோவிலுக்கு வர முடியும். மாசத்தில் வரும் ஒரே ஒரு செவ்வாய் கிழமை மட்டும் கொழுக்கட்டை செய்யப்பட்டு அம்மனுக்கு படைக்கப்படும். மேலும் பௌர்ணமி தோறும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 814

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு பின்னர் தான் செண்பகாதேவி அருவி அமைந்திருக்கின்றது இது குற்றால மெயின் அருவிக்கு மேலே அமைந்திருக்கும் அருவியாகும். ஆனால் இந்த அருவியில் இருந்து தான் பல பகுதிகளுக்கு குடிநீர் செல்வதால் இங்கு குளிப்பதற்கு அனுமதி கிடையாது.

    MORE
    GALLERIES

  • 914

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    மேலும் இங்கு நாகம் மற்றும் புற்று அமைந்துள்ளது அதற்கு மக்கள் மஞ்சள் தூவி பூஜைகள் செய்து வருகின்றனர். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர், அகத்தியர், உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் இடம் பெற்று இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 1014

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    பௌர்ணமி தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம், ஆனால் மதியம் வரை தான் கோவிலுக்கு மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 1114

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    பொதுமக்கள் மலைக்கு மேலே பிளாஸ்டிக் பாட்டில் கவர் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது எனவே போகும்போது வனத்துறையினரால் பரிசோதித்த பின் மேலே அனுமதிக்கப்படுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 1214

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    மேலும் செண்பகாதேவி அம்மன் முதலில் உக்கிரமான காலியாக இருந்ததாகவும் அகத்திய முனிவர் தான் காளியின் கோபத்தைத் தணித்து மக்கள் வழிபாட்டிற்காக செண்பகாதேவி அம்மன் ஆக்கியதாகவும் அதனால் தான் அகஸ்திய முனிவர் அம்மன் சன்னதிக்கு முன் காவலாக அமைந்திருப்பதால் செவி வழி செய்திகள் கூறுகிறது.

    MORE
    GALLERIES

  • 1314

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    பௌர்ணமி தோறும் இங்கு மதியம் அன்னதானம் செய்யப்படுகிறது. குத்து அரிசி என்று சொல்லக்கூடிய பாரம்பரிய அரிசியில் இருந்து பிரசாதம் செய்து அதை அன்னதானமாக வழங்குவதால் அதன் சுவை நாம் தினந்தோறும் சாப்பிடும் சாதத்தை விட ஒரு வித்தியாசமான சுவையை கொடுத்தது.

    MORE
    GALLERIES

  • 1414

    குற்றாலத்தில் இப்படி ஒரு திருவிழாவா? இது தெரியாம போச்சே!

    மேலும் இந்த அன்னதானம் ஒரு மினி விருந்து போல் சாம்பார் மோர் கூட்டு சக்கரை பொங்கல் என இருந்தது. சாமிக்கு படைக்க கூடிய கொழுக்கட்டையை விளக்கு போல் செய்து அம்மனுக்கு வழிபாடு செய்து வருகின்றனர். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

    MORE
    GALLERIES