2022ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்காக 5 புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக WhatsApp நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல பில்லியன் கணக்கான யூசர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப்-ஐ ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.வாடிக்கையாளர்களுக்கான ஃபைல் ஷேரிங் மேம்பாடு, ஆடியோ கால்களில் கூடுதல் நபர்கள் இணையும் வசதி, வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் உள்பட மொத்தம் 5 அப்டேட்டுகளை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்.
ஃபைல் ஷேரிங் லிமிட் 2 ஜிபியாக உயரும்: தற்போது 100 எம்பி வரையிலான ஃபைல்களை வாடிக்கையாளர்கள் ஷேர் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வரையறையை 2 ஜிபி-யாக அதிகரிக்க வாட்ஸ்அப் திட்டமிட்டிருக்கிறது. அர்ஜெண்டினாவில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு இந்த வெர்ஷன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் : குரூப்களில் அதிக ஆப்சன் மற்றும் கட்டுப்பாடுகளை வாட்ஸ்அப் கொண்டு வருகிறது. இது அட்மின்களின் செயல்பாட்டை மேலும் ஊக்குவிக்கும். குரூப் மற்றும் குரூப் உறுப்பினர்களின் பார்வைக்கு உகந்தது அல்ல என்று அட்மின் நினைக்கும் பதிவுகளை இனி டெலீட் செய்வதற்கான ஆப்சன் இடம்பெற உள்ளது. இதன் மூலம், குரூப்களில் ஆட்சேபகரமான, வன்முறையை தூண்டுகிற பதிவுகள் போன்றவை கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.