முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக சீன செயலியான டிக்டாக்கை பணியாளர்கள் தங்கள் போன்களில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் முடிவெடுத்துள்ளது. பிரிட்டன் மட்டுமில்லாமல் உலகில் உள்ள பல நாடுகள் டிக்டாக் செயலியை தடை செய்துள்ளது. அவை எந்தெந்த நாடுகள் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • 112

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    : தாலிபான் ஆட்சியில் இருக்கும் ஆப்கானில், டிக்டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகள் கடந்த 2022ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இந்த செயலிகள் ‘தவறாக’ வழிநடத்துகிறது என காரணம் தெரிவிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 212

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    பெல்ஜியம் : இணையப் பாதுகாப்பு, தனிநபர் உரிமை, தவறான செய்தி பரவுவதைத் தடுப்பது என்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டு பெல்ஜியம் பிரதமர் அலக்சேண்டர் டி க்ரூ டிக் டாக் செயலியை 6 மாத காலங்களுக்குத் தடை செய்தார். மேலும் அந்நாட்டு மாநில பாதுகாப்பு சேவை மற்றும் அதன் இணையப் பாதுகாப்பு மையம் ஆலோசனைப் படி கடந்த மாதம் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 312

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    கனடா : அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மொபைல்களில் டிக்டாக் செயலியில் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தக் கனடா அரசு தடை விதித்தது. இதற்குத் தனிமனித சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் காரணமாகச் சொன்னது கனடா அரசு. மேலும் வரும்காலத்தில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 412

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    டென்மார்க் : டென்மார்க் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தத் தடை விதித்தது. இந்த செயலியைப் பயன்படுத்துவோர் விரைவாக இதை நீக்கவும் உத்தரவிட்டது. இதற்காக ‘பாதுகாப்பு காரணங்கள்’ எனவும் ‘பணிக்குத் தேவையான செயலிகளை மட்டும் வைத்துக்கோல்லவும்’ அறிவுறுத்தியிருந்தது.

    MORE
    GALLERIES

  • 512

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    ஐரோப்பிய யூனியன் : அரசால் வழங்கப்பட்ட மொபைல்களில் டிக்டாக் செயலியை நீக்க ஐரோப்பிய யூனியன் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது. மேலும் தங்களின் சொந்த மொபைல் போன்களிலும் டிக்டாக் செயலியை நீக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 612

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    இந்தியா : தனிமனித சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணங்களாகக் குறிப்பிட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு, இந்தியா 50ற்கும் மேற்பட்ட சீன செயலிகளைத் தடை செய்தது. இந்தியா - சீன எல்லையில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்த செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 712

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    நியூசிலாந்து : இந்த மார்ச் மாதம் இறுதிக்குள் நியூசிலாந்து அதிகாரிகள் தங்களின் மொபைல்போன்களில் உள்ள டிக்டாக் செயலிகளை நீக்க நியூசிலாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதிகாரிகளுக்கு ஜனநாயக கடமையாற்ற டிக்டாக் செயலி தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 812

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    நார்வே : நார்வேவில் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மொபைல்போன்களில் இருந்து டிக்டாக் செயலியை நீக்க அந்நாட்டு அரசு நேற்று (23/03/2023) உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள நகரங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் இந்த செயலியை நீக்க நார்வே அரசு உத்தரவிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 912

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    பாகிஸ்தான் : கடந்த 2020 அக்டோபர் மாதம் முதல் டிக்டாக் செயலிக்கு 4 முறை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர். இந்த செயலி ‘ஒழுக்கக்கேடான செயல்களை’ ஆதரிக்கிரது என இந்த தடைக்கு விளக்கம் கொடுத்தனர் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்.

    MORE
    GALLERIES

  • 1012

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    தைவான் : கடந்த 2022 டிசம்பர் மாதம், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பதாக கூறி, FBIயின் அறிவுறுத்தலின்படி தைவான் அரசு டிக்டாக் செயலிக்குத் தடை விதித்தது. அரசின் மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், டேப்லட்கள் என அனைத்து சாதனங்களிலும் டிக்டாக் செயலியை நீக்கக்கோரி தைவான் அரசு உத்தரவிட்டது.

    MORE
    GALLERIES

  • 1112

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    பிரிட்டன் : பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த வாரம் அரசு அதிகாரிகள் தங்கள் தொழில்நுட்ப கருவிகளில் உள்ள டிக்டாக் செயலிகளை நீக்கப் பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது பொதுமக்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES

  • 1212

    டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?

    அமெரிக்கா : பாதுகாப்பு காரணங்களுக்காக அரசின் தொழில்நுட்ப கருவிகளில் உள்ள டிக்டாக் செயலியை நீக்க, அரசு அதிகாரிகளுக்கு 30 நாட்கள் கால அவகாசத்தைக் கொடுத்தது அமெரிக்க அரசு. மேலும் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் டிக்டாக் செயலியை அரசு தடை செய்துள்ளது.

    MORE
    GALLERIES