வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு குறைந்து தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், அது, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து கனமழை எதிரொலியாக தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகையில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காரைக்காலில் பெய்து வரும் மழையின் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (பிப்ரவரி 3) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.