நாடு முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு அவசியம் கருதி அரசு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் படி, சாலைகளில் ஹெல்மெட் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் கடந்த திங்கட் கிழமை முதல் இருசக்கர வாகனத்தில் பின்புறத்தில் உட்கார்ந்து பயணம் செய்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்று 3000-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹெல்மெட் அணியும் நபர்கள் அதை முறையாக அணிகிறார்களா அல்லது ஏனோ தானோ என அணிகிறார்களா என்பதை பொருத்து அவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து ஹெல்மெட்டை முறையாக அணியவில்லை என்றாலும் அந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.2,000 இனி அபராதம் விதிக்கப்படும்.
யாருக்கெல்லாம் இனி அபராதம் : ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.2,000 அபராதம். வாகன ஓட்டி ஹெல்மெட்டை அணிந்து, அதற்கான buckle( லாக் முடிச்சை) அணியவில்லை என்றால் அவருக்கு ரூ.1,000 அபராதம். BSI Bureau of Indian Standards) தரச்சான்று இல்லாத ஹெல்மெட் அணிந்தால் அந்த நபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். ட்ராபிக் சிக்னலில் விதிமுறைகளை பின்பற்றாமல் நிற்காமல் செல்லும் நபர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.