திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மலையம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவரின் நிலத்தில் நேற்று அதே கிராமத்தை சேர்ந்த சுமார் 24பெண்கள் நாட்டுநடவு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அப்போது மதியம் வேலை நேரத்தில் களம்பூர் பேரூராட்சியில் உள்ள உள்ளுர் ஜீஸ் கடையிலிருந்து ஜீஸ் வாங்கி வந்து நாட்டு நடவு பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு கொடுத்துள்ளனர்.
இதனையொடுத்து இன்று விடியற்காலை மற்றும் காலையில் நிலத்தின் உரிமையாளர் குமரேசன் நிலத்தில் நடவு பணி செய்த சிவரஞ்சினி, தமிழ்செல்வி, மஞ்சுளா, கன்னியம்மாள், பூங்காவனம், ரேவதி, ஜெயா, மகாலட்சமி, சஞ்சய் (9), ப்ரீத்திஷா (13), விஜயலட்சுமி உள்ளிட்ட 18பேருக்கு வாந்தி மயக்கம் வயிற்றுபோக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளிட்டவைகள் ஏற்பட்டு மலையம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.