தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. புறநகர் ரயில்களில் அரசு பணியாளர்கள் மற்றும் உரிய அனுமதி கடிதம் வைத்திருந்தவர்கள் மட்டுமே பயணித்து வந்தனர்.