முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » ஏற்காட்டில் 45வது கோடை விழா உற்சாகத்துடன் தொடக்கம்..! குவியும் சுற்றுலா பயணிகள்

ஏற்காட்டில் 45வது கோடை விழா உற்சாகத்துடன் தொடக்கம்..! குவியும் சுற்றுலா பயணிகள்

Salem | ஏற்காட்டில் தற்போது குளுகுளு வென நிலவும் சீதோஷ்ண நிலை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உள்ளது.

  • 16

    ஏற்காட்டில் 45வது கோடை விழா உற்சாகத்துடன் தொடக்கம்..! குவியும் சுற்றுலா பயணிகள்

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 45 ஆவது கோடை விழா மலர்க்கண்காட்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

    MORE
    GALLERIES

  • 26

    ஏற்காட்டில் 45வது கோடை விழா உற்சாகத்துடன் தொடக்கம்..! குவியும் சுற்றுலா பயணிகள்

    மே 25-ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதனையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் 5லட்சம்  வண்ண மலர்களை கொண்டு  மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு பட்டாம்பூச்சி, மகளிருக்கான இலவச பேருந்து, மேட்டூர் அணை, வள்ளுவர் கோட்டம், மாட்டு வண்டி, குழந்தைகளை கவரும் வகையில் சின்சான் உருவம், மஞ்சப் பை உள்ளிட்ட வடிவங்கள் சுமார் 5 லட்சம் மரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 36

    ஏற்காட்டில் 45வது கோடை விழா உற்சாகத்துடன் தொடக்கம்..! குவியும் சுற்றுலா பயணிகள்

    காய்கறி கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் வண்ண காய்கறிகள் அலங்கரிக்கப்பட்ட வண்ண மயில்கள், காட்டு எருமை, விமானம், கப்பல், வீணை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளின் கண்காட்சியும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    ஏற்காட்டில் 45வது கோடை விழா உற்சாகத்துடன் தொடக்கம்..! குவியும் சுற்றுலா பயணிகள்

    ஏற்காட்டில் தற்போது குளுகுளு வென நிலவும் சீதோஷ்ண நிலை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உள்ளது. இதனால் ஏற்காட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்து ஏற்காட்டில் அழகை ரசித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 56

    ஏற்காட்டில் 45வது கோடை விழா உற்சாகத்துடன் தொடக்கம்..! குவியும் சுற்றுலா பயணிகள்

    ஏற்காடு ரோஜா தோட்டம், பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், கிளியூர் பால்ஸ், கரடியூர் பால்ஸ், சேர்வராயன் கோவில்  உள்ளிட்ட  இடங்களுகளுக்கய சென்று இயற்கையின் அழகை பார்த்து, செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க  ஏற்காட்டிற்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 66

    ஏற்காட்டில் 45வது கோடை விழா உற்சாகத்துடன் தொடக்கம்..! குவியும் சுற்றுலா பயணிகள்

    தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் ஒவ்வொரு நாட்களும்,  படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகளும், நாய் கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சி அரங்குகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளது இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் தேவையான குடிநீர் உள்ளிட்த் அடிப்படை வசதி, நடமாடும் கழிப்பிட வசதி போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் : கோகுலகண்ணன் (சேலம்)

    MORE
    GALLERIES