அரசு பொறுப்பேற்ற பின் மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இதனால் புதிய கார்டுகள் கோரி விண்ணப்பங்கள் குவிந்து கொண்டே வருகிறது. குடும்பத்தில் திருமணமான பலரும் தங்களை ரேஷன் கார்டில் இருந்து நீக்கி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஒரு நபர் ரேஷன் எண்ணிக்கை தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ரூ.1000 உரிமை தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இதனால் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் போலியான கார்டுகள் மற்றும் நீண்ட நாட்களாக ரேஷன் வாங்காத கார்டுகள் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
எனவே ஒரு நபர் ரேஷன் கார்டு குறித்து தமிழக அரசு தெளிவான முடிவை விரைவில் அறிவிக்க வேண்டுமென்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் எந்தவித சிக்கல் இல்லாமல் பொருட்கள் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். ரூ.1000 உரிமைத்தொகை பெறுவதற்கு ஒரு நபர் ரேஷன் கார்டு தகுதி உள்ளதா என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.