முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » 3 வயது மகனுடன் சென்றபோது தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்.. ஒசூரில் பரபரப்பு

3 வயது மகனுடன் சென்றபோது தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்.. ஒசூரில் பரபரப்பு

தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக சதீஸ்குமார் தனது மகனுடன் கடந்தாண்டு வாங்கிய ஒகினா எலக்ட்ரிக் பைக்கில் சிறிது தூரம் சென்று மகிழ்வித்த பின்பு வேலைக்கு செல்வதை தினமும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் திடீரென வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் இருவரும் காயம் இன்றி உயிர் தப்பினர்.

  • 14

    3 வயது மகனுடன் சென்றபோது தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்.. ஒசூரில் பரபரப்பு

    ஒசூர் அருகே எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி தனியார் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் சதீஸ்குமார், இவர் பெங்களூர் தனியார் நிறுவன மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 24

    3 வயது மகனுடன் சென்றபோது தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்.. ஒசூரில் பரபரப்பு

    தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக சதீஸ்குமார் தனது மகன் புகழ்(3) என்பவருடன் கடந்தாண்டு வாங்கிய ஒகினாவா எலக்ட்ரிக் பைக்கில் சிறிது தூரம் சென்று மகிழ்வித்த பின்பு வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 34

    3 வயது மகனுடன் சென்றபோது தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்.. ஒசூரில் பரபரப்பு

    இந்தநிலையில் இன்று வழக்கம் போல தந்தை மற்றும் மகன் குடியிருப்பு பகுதியிலேயே வாகனத்தில் சென்றபோது, இருவரும் அமர்ந்திருக்கும் சீட் பகுதியில் புகை கிளம்பி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட இருவரும் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர். இறுதியில் தந்தை மகன் இருவரும் காயங்களின்றி தப்பிய நிலையில் அக்கம்பக்கத்தினர் வாகனத்தில் பற்றிய தீயை நீர் ஊற்றி அணைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    3 வயது மகனுடன் சென்றபோது தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்.. ஒசூரில் பரபரப்பு

    இதுகுறித்து எலக்ட்ரிக் பைக், நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, சிப்காட் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒகினாவா எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் : செல்வா

    MORE
    GALLERIES