பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் பூஞ்சேரி பகுதியில் மட்டும் 6 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக, மருத்துவக் குழுவினர் 300-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுகின்றனர். 30 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.