புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிசம்பர் 31ம் தேதி 159 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மதுவிற்பனை 9 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 48 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் கோவை மண்டலங்களில் தலா 28 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 27 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது. . சேலம் மண்டலத்தில் 26 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டது.