வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் அவுட்டாகினர். பின்வரிசையில் அஸ்வின் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். குல்பித் யாதவ் 40 ரன்கள் என மாஸ்கட்ட இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே இந்திய அணி மிகவும் கவனிக்கப்பட்ட வீரராக சூர்யகுமார் யாதவ் இருந்து வந்தார். டி20 போட்டியில் அவர் காட்டிய அதிரடி, மிரட்டலான சதங்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். சூர்யகுமார் 43 இன்னிங்சில் 1424 ரன்கள் சேர்த்து இந்தாண்டு இந்திய அணியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை வைத்திருந்தார்.