கிரிக்கெட் போட்டிகளில், நன்றாக வீசப்பட்ட பந்துகளை, பேட்ஸ்மென்கள் சிக்சர் அடித்தால், பந்துவீச்சாளர்களுக்காக தோனி கைதட்டுவார் என சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார். தோனியின் கேப்டன்சி குறித்து பேசிய முரளிதரன், பந்துவீச்சாளர்களை எப்போதும் தோனி நம்புவார் என்று குறிப்பிட்டுள்ளார். சில நேரங்களில் நல்ல பந்துகள் சிக்சர் போனாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், பந்துவீச்சாளர்களை பாராட்டக் கூடியவர் தோனி என்று குறிப்பிட்டுள்ளார்